Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசு தந்த முக்கிய விளக்கம்.. ஆர்எஸ்எஸ் தொடர்ந்த அவமதிப்பு வழக்குகளை முடித்துவைத்த ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்எஸ்எஸ் ஊர்வலம் தொடர்பாக தமிழக காவல்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் நியாயமற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில் அதனை ஏற்று காவல்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர தினம், விஜயதசமி மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி ஆகிய தினங்களில் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

Chennai High Court closed contempt of court cases related to RSS procession after government explanation

இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும் கூட தமிழக காவல்துறை சார்பில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதையடுத்து தமிழக காவல்துறை மற்றும் அரசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின்போது தமிழக தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற வழிக்காட்டுதல் படி தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு வரைவு வழிக்காட்டு நெறிமுறைகள் என்பது தாக்கல் செய்யப்பட்டது.

அதில் ஆர்எஸ்எஸ் ஊர்வலங்களுக்கு நியாயமற்ற முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கு தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்தார். அப்போது அவர் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதில் நியாயமற்ற முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆர்எஸ்எஸ் ஊர்வலம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை முடித்து வைத்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

மேலும் இதுபோன்ற அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்படும்போது பேனர்கள், பதாகைகள் எடுத்து செல்ல வேண்டும் என்றால் முன்வைப்பு தொகை செலுத்த வேண்டும் எனவும், ஊர்வலத்தின்போது பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் அந்த தொகையை திருப்பி பெற முடியாது எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+