Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏத்துக்கவே முடியாது! எஸ்.வி.சேகருக்கு இதுவே வேலையா போச்சு? கடும் அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அருவறுக்கதக்க கருத்துகளை மறுபதிவிடுவதே நடிகர் எஸ்.வி.சேகரின் வாடிக்கை என்ற ஆதாரங்களை பார்த்த சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

பன்வாரிலால் புரோகித் ஆளுனராக இருந்தபோது, ஆளுனர் மாளிகையில் பெண் பத்திரிகையாளர் அவமதிக்கப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இந்த தகவலை நடிகரும், பாஜகவைச் சேர்ந்தவரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நடிகர் எஸ்.வி.சேகர் மறுபதிவு செய்திருந்தார்.

எஸ்.வி.சேகர் விவகாரம்

எஸ்.வி.சேகர் விவகாரம்

இதுதொடர்பாக சென்னை காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரில், எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் 4 வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்திருந்தார்.

நிபந்தனையற்ற மன்னிப்பு

நிபந்தனையற்ற மன்னிப்பு

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது பெண் நிருபர்களை பேசிய விவகாரம் தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. ஒவ்வொரு வழக்கிற்கும் தனித்தனியாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது

மீண்டும் புகார்

மீண்டும் புகார்

அப்போது, புகார் அளித்திருந்த தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கடந்த 2020ஆம் ஆண்டில் நடிகர் எஸ்.வி. சேகர் சமூக வலைத்தளங்களில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பதிவிட்ட பதிவுகளை அவர் ரிடிவீட் செய்துள்ளதாகவும், அதனை நீக்கியுள்ளதாகவும் கூறி அதற்கான பதிவுகள் தாக்கல் செய்யப்பட்டன.

ஏற்று கொள்ள முடியாது

ஏற்று கொள்ள முடியாது

அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதி மற்ற பதிவுகளை அவர் படிக்காமல் பகிர்ந்ததை ஏற்று கொள்ளலாம், ஆனால் இதுபோன்று மறுபதிவு செய்ததை ஏற்று கொள்ள முடியாது என்றும், சமுதாயத்தில் பொறுப்பான மனிதராக இருந்து கொண்டு இதுபோன்ற செயலை செய்வது ஏற்று கொள்ள முடியாது என அதிருப்தி தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக எஸ் வி.சேகர் விளக்கமளிக்க உத்தரவிட்டுவழக்கு விசாரணை 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+