பஞ்சமி நிலமாக மாற்றிய உத்தரவுக்கு இடைக்கால தடை.. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணை!
சென்னை: தனி நபரின் நிலத்தை பஞ்சமி நிலமாக மாற்றிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரை தாத்தா கடந்த 1923 ஆம் ஆண்டு சின்னசேலத்தில் உள்ள போசப்பாடி கிராமத்தில் நிலங்களை பல நபர்களிடம் இருந்து வாங்கியுள்ளார்.

அதன் பின் தாத்தாவின் பெயரில் இருந்த இந்த நிலத்தை, அவரின் பேரன் தங்கராஜ் பெயருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு கிரய பத்திரம் மூலம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த நிலங்கள் ஆதி திராவிட மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலம் எனக் கூறி இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக கள்ளக்குறிச்சி வட்டார வருவாய் அதிகாரி, தங்கராஜ்க்கு கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இதையடுத்து, தங்கராஜ், மக்கள் தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர் துரை, சின்ன சேலத்தை சேர்ந்த தேவராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி, கடந்த 2021 ஆம் ஆண்டு தங்கராஜின் நிலத்தை பஞ்சமி நிலம் என அறிவித்து, அவரின் பெயரில் இருந்த பட்டாவை ரத்து செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட வட்டார வருவாய் அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நடவடிக்கையை எதிர்த்து தங்கராஜ் தொடர்ந்த வழக்கில், மீண்டும் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மேல்முறையீடு செய்ய உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவின்படி, மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மேல்முறையீடு செய்த போது, பஞ்சமி நிலம் எனக்கூறி தங்கராஜின் பட்டாவை ரத்து செய்த உத்தரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இதனை எதிர்த்தும், தன் நிலத்தை மீட்டு தன்னிடம் மீண்டும் ஒப்படைக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தங்கராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதிஷ்குமார், பஞ்சமி நிலம் என அறிவித்த கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அதிகாரியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.
-
திருமணமான ஆண், வேறு பெண்ணுடன் 'லிவ்-இன்'உறவில் இருந்தால் குற்றம் அல்ல.. ஐகோர்ட் -
பூவை ஜெகன்மூர்த்தி மீதான கடத்தல் வழக்கு தள்ளுபடி! கடுமையாக வாதம் வைத்த போலீஸ்.. மனுதாரர் ட்விஸ்ட்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications