Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆன்லைன்ல டாக்குமென்டை செக் செய்வேன்! விஷால் சொன்னது மட்டும் பொய்யா இருந்திச்சுன்னா! நீதிபதி வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீதிமன்றம் கேட்ட ஆவணங்களை ஆன்லைனில் விஷால் தரப்பு தாக்கல் செய்யாமல் இருந்திருந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு,செலுத்தியது.

Chennai High court judge condemns Actor Vishal for not obeying court order

அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால் நேரில் ஆஜராகியிருந்த நிலையில், அவரது நான்கு வங்கிக் கணக்குகளின் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரைக்குமான கணக்கு விவரங்களையும், விஷாலுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்து விவரங்கள், அவை எப்போது வாங்கப்பட்டன, சொத்து ஆவணங்களுடன் செப்டம்பர் 19ல் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, ஆஜராக விலக்கு அளிக்கபட்டு இருந்தது.

அன்றைய தினம் இந்த வழக்கு நீதிபதி P.T.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாததால், நடிகர் விஷால் இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டார். அதன்படி இன்று விஷால் ஆஜரான நிலையில், நீதிமன்ற உத்தரவிட்டபடி ஆவணங்களை தாக்கல் செய்யாததால், விஷால் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை ஏன் எடுக்க கூடாது என் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு விஷால் தரப்பில் இருந்து ஆஜரான வழக்கறிஞர், வங்கியிலிருந்து ஆவணங்களை பெற தாமதம் ஆகிவிட்டது. அதனால் நீதிமன்றம் கேட்ட ஆவணங்கள் நேற்று ஆன்லைன் வாயிலாக தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். அதற்கு நீதிபதி, நேற்று ஆன்லைனில் தாக்கல் செய்தது உறுதியாகாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.

விஷால் தரப்பில் 3 கார்கள், ஒரு பைக் இருப்பதாகவும், இரண்டு வங்கி கணக்குகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. தனக்கு சொந்தமான வீட்டின் கடன் தொடர்பான விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. 75 வயதான தந்தையின் கிரானைட் தொழிலில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தின் காரணமான அவரது வீட்டுக் கடனையும் விஷால் செலுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான விவரங்களை தாக்கல் செய்ய 6 நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டது.

மேலும் அடுத்த 28 நாட்களுக்கு படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள இருப்பதால், அடுத்த விசாரணையின்போது ஆஜராக விலக்கு அளிக்கவும் விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையேற்ற நீதிபதி, வங்கிகளிலிருந்து கூடுதல் ஆவணங்களை பெறவும், நீதிமன்றம் கேட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்த விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கியும், விஷால் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.

கடந்த 12 ஆம் தேதி நீதிமன்றத்தில் கூறியதற்கு முரணாக வங்கி கணக்கில் விவரம் எதுவும் இருந்தால் எதிர்காலத்தில் படம் எதுவும் நடிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதி, பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்றால் விஷால் தொடர்பான அனைத்து படங்களையும் எதிர்காலத்தில் தடை விதிக்கலாமா, சொத்து விவரங்களை ஏன் தாக்கல் செய்யவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினமும் விஷாலை நீதிபதி கடுமையாக எச்சரித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+