ஜன.,2.. அமைச்சர்களின் வழக்குகளை மீண்டும் விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் -முக்கிய அறிவிப்பு
சென்னை: தற்போதைய தமிழக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான வழக்குகளை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்துக்கு அவர் மாற்றப்பட்டார். இந்நிலையில் தான் 2024 ஜனவரி 2ம் தேதி முதல் மீண்டும் அவரே அந்த வழக்குகளை விசாரிப்பார் என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் ஆனந்த் வெங்கடேஷ். இந்நிலையில் தான் அவர் தாமாக முன்வந்து சில வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். அதாவது முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகளை அவர் அவர் தாமாக முன்வந்து விசாரித்தார்.
திமுக மற்றும் அதிமுக தலைவர்களின் பல்வேறு வழக்குகளை அவர் கையில் எடுத்தார். திமுகவை பொறுத்தமட்டில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சரான கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி உள்ளிட்டோரின் வழக்குகளை அவர் விசாரிக்க தொடங்கினார்.

அதேபோல் அதிமுகவை பொறுத்தமட்டில் முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோரின் வழக்குகளையும் தாமாக முன்வந்து விசாரித்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதற்கிடையே தான் கடந்த அக்டோபர் மாதம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பணிமாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு மாற்றப்பட்டார். இது வழக்கமான நடைமுறை தான். அதாவது 3 மாதத்துக்கு ஒருமுறை நீதிபதிகள் இப்படி இடமாற்றம் செய்யப்படும் நடைமுறை உள்ளது. அதனடிப்படையில் தான் ஆனந்த் வெங்கேடஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து மதுரை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்த வழக்குகள் நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றப்பட்டது.
தற்போது மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேசின் 3 மாத பணி என்பது முடிவுக்கு வர உள்ளது. இதனால் மீண்டும் அவர் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு திரும்ப உள்ளார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதாவது சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை நடத்த உள்ளார். தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட தற்போதைய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான வழக்குகள் ஆனந்த் வெங்கடேஷ் முன்பு பட்டியலிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications