Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமலாக்க துறை சம்மனுக்கு தடை, ஆனால் விசாரணை தொடரலாம்.. மணல் குவாரி விவகாரம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி கலெக்டர்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த செப். 12ஆம் தேதி தமிழகத்தில் மணல் குவாரிகள், சேமிப்பு கிடங்குகளில் அமலாக்க துறை ரெய்டு நடத்திய நிலையில், அதில் ரூ.12.82 கோடி ரொக்கம், 1024 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. பல்வேறு ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளது.

Chennai High Court to pronounce order today in illegal sand mining case

இதற்கிடையே இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் சேர்க்கப்படாத சட்டத்தின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியாது என்றும் சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக விசாரணை நடத்துவது மாநில அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தார்.

மேலும், அமலாக்கத் துறையின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற அவர், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கனிம வள குற்றங்கள் தொடர்பாக மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர, அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். அதாவது மணல் கொள்ளை பற்றி விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரமில்ல என்பதே தமிழக அரசின் வாதமாக இருந்தது.

அதற்கு அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், கனிம வள சட்டம் மட்டுமல்லாமல், இந்தியத் தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், 4,500 கோடி ரூபாய் சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த வழக்கு சம்பந்தமான விவரங்களை விசாரணைக்கு உதவியாகத் தான் கேட்கப்பட்டது என்றும் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விசாரணைக்கு உதவி செய்யக் கேட்பதும், சம்மன் அனுப்புவதற்கும் வித்தியாசம் உள்ளதாக குறிப்பிட்டனர். சம்மன் அனுப்பப்பட்டவர்கள் யாரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல. விசாரணை தான் நடக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், கனிம வள சட்ட வழக்குகளை அமலாக்கத் துறை விசாரிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர் மோசடி, ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதால் தான் விசாரணை நடத்தப்படுகிறது என்றும் அதற்கு அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனு மீது இன்று (நவ. 28) விசாரணைக்கு உத்தரவிடுவதாகக் கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். இந்த வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமலாக்கத் துறை சம்மனுக்கு மட்டுமே தடை, விசாரணைக்குத் தடையில்லை என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். தமிழக அரசின் வழக்குகள் விசாரணைக்கு உகந்தது தான் என்ற சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், அமலாக்கத் துறை ஆட்சேபனை மனுவுக்குப் பதிலளிக்கத் தமிழக அரசுக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் மூன்று வார அவகாசம் அளித்து உத்தரவிட்டது.

மேலும், குறுகிய காலத்தில் இந்த வழக்கில் பதில் அளித்த அமலாக்கத் துறைக்கும் சென்னை ஐகோர்ட் பாராட்டு தெரிவித்தது. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் டிச. 19ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+