Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாத்திமாவுக்கு என்னதான் நடந்தது.. செல்போனை ஆன் செய்தவுடன் வந்த மெசேஜ்.. நிஜம் வெளியே வருமா?

பாத்திமாவின் தற்கொலையில் முழு விவரம் என்ன

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    IIT Madras student Fathima Latheef wrote before suicide | பாத்திமா தற்கொலை நிஜம் வெளியே வருமா?

    சென்னை: கடந்த சில நாட்களாகவே தமிழகம் - கேரள மக்களை நிலை குலைய செய்து வருவது ஐஐடி மாணவி பாத்திமாவின் தற்கொலைதான்.. பாத்திமாவுக்கு என்னதான் நடந்தது.. ஏன் இந்த துயர முடிவினை எடுத்தார்? அப்படி என்ன நெருக்கடி?

    படிப்பில் கெட்டிக்கார பெண்தான் பாத்திமா லத்தீப். பிளஸ் 2-வில் நல்ல மார்க் எடுத்திருந்தார்.. ஐஐடியில் படிக்க ரொம்பவும் ஆசை.. அதனால் ஐஐடி படிப்புக்கு விண்ணப்பிக்கவும், முதுலில் உபி-யில் உள்ள பனாரசில்தான் சீட் கிடைத்துள்ளது. ஆனால், கும்பல் தாக்குதல் வடமாநிலங்களில் அதிகம் என்பதால் பயந்து போன பெற்றோர், சென்னையிலேயே படி என்று சொல்லி உள்ளனர்.

    பெற்றோருக்காகவே சென்னை ஐஐடி வந்து சேர்ந்தார் பாத்திமா. ஒரு வருஷம் நல்லாதான் போய்ட்டு இருந்தது.. ஆனால் பிரச்சனை வந்தது ஒருமாசத்துக்கு முன்னாடிதான். பொதுவாக நைட் நேரம் 9 மணி ஆனால் அம்மாவுடன் போனில் பேசுவாராம் பாத்திமா. அப்பா துபாயில் வேலை பார்த்தாலும், அவரிடமும் அடிக்கடி பேசி வந்துள்ளார். இருவரிடமும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டும் உள்ளார் பாத்திமா.

     துன்புறுத்தல்கள்

    துன்புறுத்தல்கள்

    ஆனால் ஒரு மாதமாக நடந்ததை பற்றி அம்மாவிடம் எதையும் சொல்ல காணோம். மத ரீதியான துன்புறுத்தல்கள் பாத்திமாவுக்கு ஏற்பட்டுள்ளது. "என் பேரை கூட இங்க சொல்ல முடியல..ம்மா" என்று ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், ஒன்று, இரண்டு விஷயங்களை அம்மாவிடம் சொல்லி உள்ளாரே தவிர, எல்லாவற்றையும் சொல்லவில்லை. தற்கொலைக்கு முந்தைய நாள்கூட, அப்பாவிடம் போனில் ஒன்றரை மணி நேரம் அழுதுள்ளார்.

     பிணமாக தொங்கினார்

    பிணமாக தொங்கினார்

    ஆனால் வழக்கம்போல் அம்மாவுக்கு அன்று போன் பண்ணவில்லை. அம்மா போன் பண்ணாலும் எடுக்கவில்லை.. விடிகாலை 5 மணிக்கு போன் பண்ணாலும் எடுக்கவில்லை. பயந்துபோன அம்மா, பக்கத்து ரூம் பிள்ளைகளிடம் என்ன, ஏதென்று போய் பார்க்க சொல்லவும்தான் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார் பாத்திமா.

    அரசியல்வாதி

    அரசியல்வாதி

    ராத்திரி எல்லாம் பதறியும், தவித்தும் கிடந்த தாய்க்கு, இறுதியாக கிடைத்த தகவல், மகள் இறந்துவிட்டாள் என்பதுதான். இதற்கு பிறகு கேரள அரசியல்வாதி ஒருவருடன் பாத்திமாவின் சகோதரி ஆயிஷா சென்னை வந்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் போலீசில் புகார் தந்தார். ஆனால், மன உளைச்சல் என்று போலீசார் முடிவுக்கு வந்திருந்தனர். தான் கேரளாவில் மேயர் என்று ஆயிஷா உடன் வந்தவர் சொல்லவும்தான் போலீசார் வழக்கை பதிவு செய்திருக்கிறார்கள்.

     ஆயிஷா

    ஆயிஷா

    சகோதரியின் ரூமுக்கு வந்து பார்த்தபோது, பாத்திமாவின் செல்போன் ஆஃப் ஆகி கிடந்தது. அதனால் அதை எடுத்து சார்ஜ் போட்டு, பிறகு ஆன் செய்து பார்த்தால், "எனது சாவுக்கு காரணம் சுதர்சன் பதமநாபன் என்ற பேராசிரியர்" என்று செல்போன் வால்பேப்பரிலேயே எழுதப்பட்டிருந்ததை கண்டு அதிர்ந்தார் ஆயிஷா. இதை பற்றின மற்ற விவரங்கள் சாம்சங் கேலக்சி நோட்டில் இருக்கிறது என்றும் பாத்திமா குறிப்பு தந்திருந்தார். அந்த நோட்டை பிரித்து பார்த்தபோதுதான், ஒரு மாசமாக அங்கே நடந்த கொடுமைகளை எழுதி வைத்திருந்தார்.

     பெயர்கள்

    பெயர்கள்

    மொத்தம் 6 பக்கம் எழுதி வைத்திருக்கிறாராம் பாத்திமா.. நிறைய பெயர்களையும் அதில் குறிப்பிட்டுள்ளாராம். ஒரு மிகப் பெரிய உயர் கல்வி நிறுவனத்தில் பணியாற்றுவோர், தங்களது மாணவ, மாணவியரிடம் நடந்து கொள்ளும் முறையில் மாற்றம் தேவையா என்ற கேள்வியும் மக்களுக்கு எழுகிறது. ஒரு சின்ன பெண் தற்கொலை செய்யும் அளவுக்கு செல்கிறார் என்றால் அந்த அளவுக்கு நெருக்கடி எப்படி உருவானது, ஏன் உருவானது, யாரால் உருவானது என்ற கேள்விகளும் அடுத்தடுத்து தொடர்கின்றன.

     என்ன காரணம்?

    என்ன காரணம்?

    இதை ஒரு சாதாரண மன நெருக்கடியால், மன அழுத்தத்தால் வந்த மரணம் என்று கடந்து செல்ல முடியாது, கூடவும் கூடாது. காரணியைக் கண்டுபிடித்து அதை நிரந்தரமாக சரி செய்ய வேண்டிய பொறுப்பு சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கு உள்ளது. எத்தனையோ நல்ல விஷயங்கள் ஐஐடி மூலம் சமூகத்திற்கு நடக்கின்றன. ஆனால் ஐஐடியின் பின்னால் பேராசிரியர்கள் என்ற ரூபத்திலோ அல்லது வேறு ரூபத்திலோ நிரந்தரமாக ஒரு கறை நீடித்திருப்பதை நிச்சயம் அனுமதிக்கக் கூடாது. இதுதான் அனைவரின் ஆசையும்.

     ஐஐடி

    ஐஐடி

    நிச்சயம் பாத்திமாவின் மரணத்திற்கு தீர்வு கிடைக்க வேண்டும். அதற்கு நியாயமான விசாரணை மட்டும் போதாது.. நிரந்தரமான தீர்வுகளும் கூடவே காணப்பட வேண்டும். காரணம், இனியும் மாயாவி போன்ற ரூபத்தில் சென்னை ஐஐடி உலா வர முடியாது. அதுவும் மக்களுடன் சம்பந்தப்பட்ட நிறுவனம்தான் என்ற நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும். அதுதான் பல பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு காண உதவும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+