தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை... வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. .
சென்னை வானிலைஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி திண்டுக்கல், ஈரோடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதேபோல் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

9 மாவட்டங்களில்
அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மழை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலை 36 டிகிரி, குறைந்த பட்சம் 27 டிகிரி செல்சியஸை ஒட்டிஇருக்கும்.

தமிழகத்தில் மழை
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம்(சென்டி மீட்டரில்): அகரம் சீகூர்(பெரம்பலூர்), வல்லம் (விழுப்புரம்) தலா 12, செஞ்சி (விழுப்புரம்) 11, வீரகனூர் (சேலம்) பொண்ணை அணை (வேலூர்) ஆரணி (திருவண்ணாமலை), கீழச்சேருவை(கடலூர்) தலா 7, சோளிங்கர் (ராணிப்பேட்டை) 6, விருதாச்சலம் (கடலூர்), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி) தலா 5, திருத்தணி (திருவள்ளூர்), தருமபுரி தலா 4 செ.மீ மழை பெய்துள்ளது.
Recommended Video

கடலுக்கு செல்ல வேண்டாம்
ஜுன் 29ம் தேதி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வரை வீசும், எனவே, மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம். இதேபோல் இன்று முதல் ஜூலை 3ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications