சென்னை டூ கோவை.. வந்தே பாரத் ரயிலில் ஏற்பட போகும் முக்கிய மாறுதல்? என்னனு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயில் சேவையை வரும் ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சென்னை செண்டிரலில் இருந்து பெங்களூர் வழியாக மைசூருவிற்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை - கோவை இடையே இயக்கப்பட இருக்கும் வந்தே பாரத் ரயிலும் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய போக்குவரத்து துறையின் முதுகெலும்பாக ரயில்வே துறை உள்ளது. நாடு முழுவதும் தினமும் பல ஆயிரக்கணக்க்கான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

மலிவான கட்டணம், சொகுசு, பாதுகாப்பான பயணம் போன்றவற்றால் பயணிகள் பெரும்பாலும் தொலை தூர பயணங்களுக்கு ரயிலைத்தான் நாடுகின்றனர்.

வந்தே பாரத் ரயில்

வந்தே பாரத் ரயில்

இதனால், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ரயில்வே துறையை மேம்படுத்த மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. சதாப்தி, ராஜ்தானி உள்ளிட்ட சொகுசு ரயில்களின் வரிசையில் வந்தே பாரத் ரயிலையும் ரயில்வே அறிமுகம் செய்தது. விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் இந்த வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சென்னை டூ கோவைக்கு

சென்னை டூ கோவைக்கு

நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து கோவைக்கும் வந்தே பாரத் ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

8-ம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்

8-ம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்

சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணிகள் அதிக அளவு பயணிப்பதை காண முடியும். அதுவும் வார இறுதி நாட்களில் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் சென்னை - கோவை இடையே இயக்கப்படும் இந்த வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி இந்த வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

 8 பெட்டிகளாக இயக்க திட்டம்

8 பெட்டிகளாக இயக்க திட்டம்

இதனிடையே, சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலில் பெட்டிகளை 8 ஆக குறைத்து இயக்க அதிகாரிகள் ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக வந்தே பாரத் ரயில்கள் 16 பெட்டிகள் கொண்டதாக இயக்கப்படுகிறது. காலை 6 மணிக்கு வந்தே பாரத் ரயில் இயக்க திட்டமிட்டு இருப்பதால் பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் 8 பெட்டிகளாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 பயண நேரம் குறையும்

பயண நேரம் குறையும்

எனினும் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. சேலம், திருப்பூரில் மட்டுமே நின்று செல்ல உள்ள வந்தே பாரத் ரெயிலில் பகல் நேரத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்காது. எனவே, 16 பெட்டிகளுடன் ரயிலை இயக்கினால் வருவாய் இழப்பு ஏற்படும் எனக் கருதி 8 பெட்டிகளை கொண்டு இயக்க ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது. வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை மற்ற ரயில்களைவிட வேகமாக செல்வதால் சென்னை - கோவை இடையேயான பயண நேரம் 6 மணி நேரம் 10 நிமிடங்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+