5 மாதங்களுக்கு பிறகு கோயம்பேடு சந்தை இன்று திறப்பு... வியாபாரிகள் மகிழ்ச்சி..!
சென்னை: கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த சென்னை கோயம்பேடு மார்க்கெட் 5 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இன்று காலை முதல் கோயம்பேடு மார்க்கெட் வழக்கம் போல் செயல்படும் நிலையில் வியாபாரிகளும், பொதுமக்களும் முகக்கவசம் அணியாமல் சந்தைக்குள் வரக்கூடாது என மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை தரப்பில் கடுமையான முறையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 194 மொத்த காய்கறி கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே அங்கு பூ, பழம் உள்ளிட்ட கடைகளை திறக்க இன்னும் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. காய்கறி கடைகளுக்கு மட்டும் அனுமதி தரப்பட்டுள்ள நிலையில் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சரக்கு லாரிகள், வேன்கள் சந்தைக்குள் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறி கடை மொத்த வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கியது போல் தங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என கோயம்பேடு மார்க்கெட் பூ மற்றும் பழக்கடை மொத்த வியாபாரிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒரே நேரத்தில் மொத்தமாக சந்தையை செயல்பட அனுமதித்தால் அதனால் ஏற்படும் கூட்ட நெரிசல் காரணமாக கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மீண்டும் கோயம்பேடு சந்தை மாறிவிடக் கூடாது எனக் கருதி அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வியாபாரத்துக்காக காய்கறி மூட்டைகள் நேற்றிரவு 9 மணி முதலே கோயம்பேடு சந்தைக்கு குவியத் தொடங்கியுள்ளன. இதனால் சரக்கு வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் பணிக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு போக்குவரத்து போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications