கணவரிடம் இருந்து குழந்தையை மீட்கக் கோரி தற்கொலைக்கு முயன்ற பெண்.. ஹைகோர்ட்டில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கணவரிடம் இருந்து குழந்தையை மீட்டுத்தரக் கோரி பெண் ஒருவர், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தின் முன் தீக்குளிக்க முயற்சித்தார். இதனால் உயர் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அமைந்தகரை சேர்ந்த துர்காதேவி - தமிழரசு தம்பதியருக்கு சிவானி என்ற 6 வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த 6 ஆண்டுகாலமாக கருத்து வேறுபாடு காரணமாக கணவனும், மனைவியும் பிரிந்து வந்தனர்.

Chennai lady commits suicide attempt in Highcourt

இந்த நிலையில், குழந்தையை கணவன் அழைத்து சென்றதால் மனமுடைந்த துர்காதேவி, காவல்துறையிடம் பல முறை புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், குழந்தையை மீட்டுத் தரக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற வாளாகத்தில் உள்ள குடும்பநில நீதிமன்றத்தின் முன், துர்காதேவி மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.

அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் விரைந்து சென்று, துர்காதேவியை தடுத்து நிறுத்தி, காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இச்சம்பவத்தால் உயர் நீதிமன்ற வளாகத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+