சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று.. பால் தட்டுப்பாடு அபாயம்
சென்னை: சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று ஏற்படுமோ என்ற பயத்தில் உள்ள ஊழியர்கள் பணிக்கு வர மறுப்பதால் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாதவரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் தினமும் 2.38 பால் பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு இரவு நேரங்களில் ஏற்றப்பட்டு சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் விநியோகம் செய்யப்படுகிறது.

இதே மாதவரம் பால் பண்ணையில் இருந்து சென்னையின் புறநகர் பகுதிகள் திருச்சி, புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஆவின் பால் அனுப்பி வைக்கப்படுகிறது,.
இந்நிலையில் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் வேலை செய்யும் தொழிலாளர்களில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் வேலை செய்து வந்தது பேக்கிங் செக்சன் என்று கூறப்படுகிறது. அந்த செக்சனில் வேலை செய்த பிற தொழிலாளர்கள் பணிக்கு வருவதற்கு பயந்து நேற்று இரவு முதல் பணிக்கு வரவில்லை இந்த பேக்கிங் செய்யும் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் வேலை செய்து வருகிறார்கள். தற்போது கொரோனா பயத்தில் வேலைக்கு வர தொழிலாளர்கள் அச்சப்படுவதால் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே மாதவரம் ஆவின் பால் பண்ணையில் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications