நீலக்கொடி கடற்கரையாகும் மெரினா பீச்! இன்னும் சில மாதங்கள்தான்! அடுத்து அடியோடு மாறிடும்! குட்நியூஸ்
சென்னை: சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான மெரினா கடற்கரையானது, புகழ்பெற்ற நீலக் கொடி சான்றிதழை பெற உள்ளது. இதை செயல்படுத்துவதற்கான டெண்டர் கிரேட்டர் சென்னை மாநகராட்சியால் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தின் ஒரே நீலக்கொடி கடற்கரையாக செங்கல்பட்டில் உள்ள கோவளம் கடற்கரை உள்ளது. இந்தச் சான்றிதழானது, தூய்மை, பாதுகாப்பு மற்றும் கடற்கரையின் நிலைமை உள்ளிட்ட சர்வதேச தரங்களைச் பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். ₹1,675 கோடியில் கடலோர மேம்பாட்டு திட்டம் தொடங்கி உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக சென்னை மெரினா பீச்சை அடியோடு மாற்ற முடிவு செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள மற்ற மூன்று கடற்கரைகள் நீலக் கொடி சான்றளிக்கப்பட்ட கடற்கரைகளாக அறிவிக்கப்படுவதற்கு ஒரு படி நெருங்கிவிட்டன, தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையம் (NCSCM) விரிவான திட்ட அறிக்கைகளை (DPR) இதற்காக தயாரித்து உள்ளது.
தமிழ்நாடு கடற்கரை மறுசீரமைப்பு இயக்கத்தின் சார்பில் உலக வங்கி கடனுதவியுடன் ₹1,675 கோடியில் கடலோர மேம்பாட்டு புதிய திட்டங்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு. இதன் மூலம் தமிழ்நாடு முழுக்க உள்ள கடலோர பகுதிகள் மேம்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு கடலோர பகுதிகளை சீரமைக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு இயக்கத்தின் கீழ் அமைக்கப்படும் சில முக்கிய திட்டங்கள் இங்கே உள்ளன. இதன் ஒரு கட்டமாக சென்னை மெரினா பீச்சை அடியோடு மாற்ற முடிவு செய்துள்ளனர்.
திமுகவின் ராஜ்யசபா உறுப்பினர் பி வில்சனின் கேள்விக்கு பதிலளித்த சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணை அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங், சென்னை மெரினா கடற்கரை, ராமநாதபுரம் அரியமான் கடற்கரை, காமேஸ்வரம் கடற்கரை ஆகியவற்றுக்கான டிபிஆர்களை தேசிய நிலையான கடலோர மேலாண்மை மையம் (என்சிஎஸ்சிஎம்) சமர்ப்பித்துள்ளது என்றார். நாகப்பட்டினம் மற்றும் கடலூரில் சில்வர் பீச் அமைக்கப்படுகிறது.
கோவளம் கடற்கரை நீலக் கொடி சான்றளிப்புத் திட்டத்திற்கான தமிழகத்தின் முன்னோடி கடற்கரையாகும், மேலும் இது தமிழக அரசின் ஆதரவுடன் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டது. இது நீல கடற்கரையாக சான்றளிக்கப்பட்டது.
தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு இயக்கத்தின் கீழ் அமைக்கப்படும் சில முக்கிய திட்டங்கள் இங்கே உள்ளன.
1.நாகப்பட்டினம் மற்றும் சென்னையில் கடல் ஆமை பாதுகாப்பு மையங்கள்
2. மனோரா, தஞ்சாவூரில் உள்ள சர்வதேச டுகோங் பாதுகாப்பு மையம்
3. பள்ளிக்கரணை பாதுகாப்பு மையம் மற்றும் சென்னையில் உள்ள சதுப்பு நிலத்தை மீட்டமைத்தல்
4. சதுப்புநிலங்கள், கடல் புல் மற்றும் நீல கார்பன் தீர்வுகள்
5. மன்னார் வளைகுடா கரியாச்சல்லி தீவுகளில் அரிப்பு கட்டுப்பாடு மற்றும் பவழ மறுசீரமைப்பு
6. ப்ளூ பிளாக் கடற்கரைகள்
7. கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைத்தல்.
8. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் ஸ்மார்ட் கடற்கரை கிராமங்கள்
9. எண்ணூர் சிற்றோடை மீட்பு ஆகிய பணிகளை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டங்கள் இந்த வருடமே நிறைவேற்றப்படும்.
புதிய கடற்கரைகள்: சென்னை மற்றும் அதன் விரிவாக்கப்பட்ட பகுதிகள் என்று மொத்தம் 52 கிமீ கடற்கரையில் புதிதாக கடற்கரைகள் கொண்டு வரப்பட உள்ளன. இந்த பகுதி சுற்றுச்சூழலுக்கு உகந்த உள்கட்டமைப்புடன் கூடிய 20 கடற்கரைகளைப் பெற வாய்ப்புள்ளது.
மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பு GCC ஆல் செயல்படுத்தப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டில் பல மண்டலங்களில் கடற்கரைகளுக்கான திட்டங்கள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில்தான் புதிதாக பல கடற்கரைகள் தொடங்கப்பட உள்ளன. எண்ணூர், பெசன்ட் நகர், கோவளம், மெரினா ஆகிய பகுதிகளுக்கு கடலோர மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த பார்வையாளர் வசதிகளை மேம்படுத்த கடற்கரைகளுக்கு அருகில் உள்ள அரசு நிலங்கள் கண்டறியப்படும் அங்கே புதிய வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சுற்றுலா துறை: தமிழ்நாடு சுற்றுலாத் துறை கிழக்கு கடற்கரை சாலையில் பின்வரும் இடங்களை மேம்படுத்துகிறது. இதற்கான பணிகள் நடக்க தொடங்கி உள்ளன.
1. முதலியார்குப்பத்தில் புதிய கடற்கரை
2. புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்குடாவில் புதிய கடற்கரை
3. பிச்சாவரத்தை முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்துதல்
4. முத்துப்பேட்டை மாங்குரோவ் காடு மேம்பாடு
அதேபோல் இதில்தான் புதிதாக பல கடற்கரைகள் தொடங்கப்பட உள்ளன. எண்ணூர், பெசன்ட் நகர், கோவளம், மெரினா ஆகிய பகுதிகளுக்கு கடலோர மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த பார்வையாளர் வசதிகளை மேம்படுத்த கடற்கரைகளுக்கு அருகில் உள்ள அரசு நிலங்கள் கண்டறியப்படும் அங்கே புதிய வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications