Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பே சென்னை மேயர் ஆர்.பிரியாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததாம். அதனால்தான் அவர் இத்தனை நாட்களாக வெளியே எங்கும் செல்லாமல் கடந்த இரு நாட்களுக்கு முன்பு ரிப்பன் மாளிகைக்கு வந்தாராம்.
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு விடுப்பில் இருந்த பிரியா, 25 ஆம் தேதி மாமன்றக் கூட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: முதல்வரை இப்போதைக்கு சந்திக்க வாய்ப்பில்லை, மே மாதத்திற்கான மாமன்ற கூட்டமும் நடைபெறுவதற்கான வாய்ப்பில்லை என தெரிவித்தார். மேலும் புதிய அரசு பொறுப்பேற்பு நிகழ்விற்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என துணை மேயர் மகேஷ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக), பெரும்பான்மை பெறாத நிலையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து, முதல்வர் விஜய் பொறுப்பேற்று 17 நாட்களாகின்றன.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா இதுவரை முதல்வர் விஜயை நேரில் சந்திக்காதது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேயரின் இந்தச் செயலுக்கு கூட்டணி கட்சியான காங்கிரஸ் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சியின் 63-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சிவராஜ் சேகரன் முன்வைத்துள்ள விமர்சனங்களை பார்க்கலாம். பதவியேற்பு விழா புறக்கணிப்பு: "முதல்வர் விஜயின் பதவியேற்பு விழாவை சென்னை மாநகராட்சியே முன்னின்று நடத்தியது. ஆனால், அதில் மேயர் பிரியா பங்கேற்கவில்லை. கடந்த காலத்தில் ஜெயலலிதா முதல்வரானபோது, அன்றைய சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்றதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்."
மரியாதை நிமித்தமான சந்திப்பு இல்லை: புதிய முதல்வர் பொறுப்பேற்று 17 நாட்களாகியும், மேயர் பிரியா அவரை மரியாதை நிமித்தமாகக் கூட சந்திக்கவில்லை.
பணிகளில் தொய்வு: மேயர் பிரியா மக்கள் பணிகள், மாநகராட்சி கூட்டங்கள் மற்றும் அலுவலக வருகை ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்துவதில்லை என சொல்லப்பட்டது.
இந்த நிலையில் மேயர் ஆர்.பிரியாவுக்கு தேர்தலுக்கு முன்பே காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் மருத்துவ விடுப்பில் இருந்தாராம். அதனால்தான் பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளாமல் இருந்தாராம். இந்த நிலையில் தற்போதுதான் ரிப்பன் மாளிகைக்கு வந்திருக்கிறார் என சொல்கிறார்கள்.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications