சென்னை மீனம்பாக்கம் மேம்பாலத்தில் வாகன சோதனை.. நடுரோட்டில் சுருண்டு விழுந்த ஏட்டு.. பெரும் சோகம்
சென்னை: சென்னையை அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் மீனம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். மீனம்பாக்கம் மேம்பாலம் அருகே செவ்வாய்கிழமை அன்று சோதனை சாவடியில் வாகன சோதனை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, மாரடைப்பால் காலமானார். இது காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்த 59 வயதாகும் ரவிக்குமார் (வயது 59) மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மீனம்பாக்கம் மேம்பாலம் அருகே சோதனை சாவடியில் வாகன சோதனை பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது இவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்ட வாகன ஓட்டிகள் மீனம்பாக்கம் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

இதையறிந்து மீனம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் டாக்டர் மற்றும் மருத்துவ குழுவினரை வரவழைத்தனர். பரிசோதனை செய்து பார்த்த போது திடீர் மாரடைப்பால் ரவிக்குமார் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ரவிக்குமார் உடலை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மீனம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த ரவிக்குமாருக்கு சித்ரா (53) என்ற மனைவியும், விக்னேஷ் (30) என்ற மகனும் இருக்கிறார்கள்.
பார்முலா கார் பந்தயத்துக்காக சென்னை தீவுத்திடல் பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த போது, கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி அன்று கொளத்தூர் உதவி ஆணையர் சிவக்குமார் மாரடைப்பால் காலமானார். கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில் கார் பந்தயம் நடைபெறும் பகுதியை சுற்றி நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.
அந்த வகையில் ஓமந்தூரார் மருத்துவமனை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவக்குமார் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்த போலீஸார், சிவக்குமாரை உடனடியாக மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிவக்குமார் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், உதவி ஆணையர் சிவக்குமார் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
கார் பந்தயம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆணையர் உயிரிழந்த சம்பவம் அப்போது சோகத்தை ஏற்படுத்தியது. இப்போது மீனம்பாக்கத்தில் வாகன சோதனையில் காவலர் உயிரிழந்துள்ளார். வெறும் ஒரு வாரத்தில் இரண்டு காவலர்கள் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications