நவம்பர் 6ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு... வானிலை மையம்
Recommended Video

சென்னை : தமிழகம், மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 6ம் தேதியை ஒட்டி வங்கக்கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதலே தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பருவமழை தொடக்கமே மழை பிச்சு வாங்கி வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன்அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, கடலோர தமிழகம் தெற்கு உள் தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு கடலோர ஆந்திராவில் துவங்கிய வடகிழக்கு பருவமழை இன்று தமிழகத்தின் இதர பகுதிகள் மற்றும் தமிழகத்தை ஒட்டி உள்ள தெற்கு கர்நாடகா ராயலசீமா மற்றும் கேரளாவிலும் துவங்கியுள்ளது.
வளிமண்டல மேல் அடுக்கில் சுழற்சி நிலவுகிறது, தமிழகம் மற்றும் குமரி பகுதியில் இந்த சுழற்சியானது நிலவுவதால் அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய கூடும். சென்னையை பொருத்தவரையில் வரும் 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது ஒரு சில நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழையும் பெய்யும்.
அடுத்த இரு தினங்களுக்கு மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. வரும் நவ.6ம் தேதியை ஒட்டி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. மிகக் குறைந்த காற்றழுத்தமாகவே தற்போது காணப்படும் நிலையில் அதன் நகர்வு எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுமா என்பது தெரிய வரும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வேதாரண்யம் 15 சென்டிமீட்டர், நாகப்பட்டினம் 14 சென்டிமீட்டர், திருத்துறைப்பூண்டி 13 சென்டிமீட்டர், மயிலாடுதுறை 9 சென்டிமீட்டர், திருவாரூர், காரைக்கால், நன்னிலம், ராமேஸ்வரம், பரங்கிப்பேட்டை 7 சென்டி மீட்டர் மற்றும் பாம்பன் மதுக்கூரிலும் மழை பெய்துள்ளது என்று அவர் கூறினார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications