31-ஆம் தேதி தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: வரும் 31-ஆம் தேதி தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
இதுகுறித்து சென்னை வானிலை மையம் தனது செய்திக் குறிப்பில் கூறுகையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

மதுரை, திருச்சி, கரூர், தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், திருத்தணி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியல் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக் கூடும். அடுத்து வரும் இரு தினங்களுக்கு விவசாயிகள், பொதுமக்கள் 11.30 மணி முதல் 3.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40- 50 கி.மீ. வரை வீசக்கூடும். அடுத்த இரு தினங்களுக்கு மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தென் கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு, தென் மேற்கு அரபிக் கடல், வடக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி அல்லது பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரை வீசக் கூடும். 27ஆம் தேதி முதல் 30 -ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதியில் உள்ள கடலுக்குள் செல்ல வேண்டாம்.
தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வரும் 31 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 4ஆம் தேதி வரை மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications