ஊழியர்களின் போராட்டத்தால் மெட்ரோ ரயில் சேவையில் எந்த பாதிப்பும் இல்லை: மெட்ரோ ரயில் நிர்வாகம்
சென்னை: 8 மெட்ரோ ரயில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் ஆங்காங்கே ரயில்களை நிறுத்தி போராட்டத்தில் இறங்கி உள்ளதால், சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஊழியர்களின் போராட்டம் காரணமாக ரயில் சேவையில் எந்தவித பாதிப்பும் இல்லை என மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சட்ட விதிகளுக்கு எதிராக மெட்ரோ ரயில் பணியாளர் சங்கம் உருவாக்கியதற்காக, 8 ஊழியர்களை பணி நீக்கம் செய்து மெட்ரோ நிர்வாகம் உத்தரவிட்டது. பணியாளர் சங்கம் உருவாக்கிய ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியதால் மற்ற ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனை அடுத்து 8 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக தெரிய வந்த தகவல்கள் பின்வருமறு:
ஊதிய உயர்வு வேண்டும் மற்றும் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாகவே சென்னை மெட்ரோ ரயில் பணியாளர் சங்கம் மெட்ரோ நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தது ஆனால் ஊழியர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத மெட்ரோ நிர்வாகம் கோரிக்கைகளை வலியுறுத்திய பணியாளர் சங்க நிர்வாகிகள் 8 பேரை இன்று அதிரடியாக பணிநீக்கம் செய்தது
இதனையடுத்து சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். தங்களை அதிக நேரம் பணி செய்ய கட்டாயப்படுத்துவதாக ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ நிர்வாகம் தங்களை அடிமை போல நடத்துவதாகவும், நியாயத்திற்காக குரல் எழுப்பியதால் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை உடனடியாக பணியில் சேர்த்து கொள்ள வேண்டும். ஊழியர்களிடம் பாரபட்சம் காட்ட கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே 8 மெட்ரோ ரயில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் ஆங்காங்கே ரயில்களை நிறுததி போராட்டத்தில் குதித்தனர். இதனால் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை முழுமையாக பாதிக்கப்பட்டது. இதனிடையே மெட்ரோ ரயில் சேவை தற்போது சீராகிவிட்டதாகவும் ஊழியர்களின் போராட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications