சென்னையில் மெட்ரோவில் பயணிக்கிறீர்களா? நாளை மட்டும் ஸ்பெஷல் ஆஃபர்! மிஸ் பண்ணிடாதீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெட்ரோ பயணிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் ஸ்பெஷல் ஆஃபரை அந்த நிறுவனம் அளித்துள்ளது.

சென்னையில் உள்ள கடும் போக்குவரத்தை குறைக்கும் முக்கிய பணிகளில் மெட்ரோ ரயில் ஈடுபடுகிறது. இதே காரணத்திற்காக ஏற்படுத்தப்பட்ட சென்னை பறக்கும் ரயிலை தொடர்ந்து மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Chennai Metro train time will be extended only for tomorrow

இந்த திட்டத்தில் நீல வழித்தடம், பச்சை வழித்தடம் என இரு வழித்தடங்கள் உள்ளன. இந்தியாவில் டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மெட்ரோ திட்டத்திற்கு பிறகு 4ஆவதாக சென்னையில் மெட்ரோ தொடங்கப்பட்டது. இந்த ரயிலின் கோயம்பேடு- ஆலந்தூர் வரையிலான மெட்ரோ சேவையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலில் தொடங்கிவைத்தார்.

இந்த வழித்தடங்களில் குறைந்தபட்சம் ரூ 10 கட்டணமும் அதிகபட்சம் ரூ 40 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் நாளை மட்டும் மெட்ரோ சேவை நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை ஒரு நாள் மட்டும் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை கிடைக்கும்.

விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறையையொட்டி போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த ரயில் சேவை நாளை ஒரு நாள் மட்டும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+