அப்பாடா.. நிம்மதி.. சென்னையில் தண்ணீர் லாரிகள் போராட்டம் வாபஸ்! நாளை வழக்கம்போல் நீர் வினியோகம்
சென்னை: சென்னையில் இன்று தண்ணீர் லாரிகள் திடீரென ஸ்ட்ரைக் செய்தன. இதனால் பல இடங்களில் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. மேலும் நாளையும் ஸ்ட்ரைக் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த போராட்டம் திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களுக்கு மெட்ரோ குடிநீர் என்பது லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான நீர் நிலையங்களில் இருந்து பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் நீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக சென்னையில் சில இடங்களுக்கு சரியாக மெட்ரோ குடிநீர் சென்று சேரவில்லை என்ற புகார்கள் எழுந்திருந்தன. இதன் தொடர்ச்சியாக இன்றும் மேலும் சில இடங்களுக்கு மெட்ரோ குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. சென்னை கோடம்பாக்கம், தியாகராய நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் செல்லும் குடிநீர் செல்லவில்லை.
இதுபற்றி விசாரித்தபோது தான் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது குடிநீர் வினியோகம் செய்யும் லாரிகளின் உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. குடிநீர் வினியோகம் செய்யும் லாரிகளுக்கு போதிய அளவில் தண்ணீர் வழங்கப்படாதது மற்றும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருக்கும் இரண்டு தண்ணீர் நிரப்பும் நிலையங்களில் பழுதடைந்த நிலையத்தை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மேலும் நாளையும் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது. இன்றைய போராட்டத்தின் காரணமாக சில இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே நாளையும் போராட்டம் நடக்கும்பட்சத்தில் தென் சென்னை முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் தான் அதிகாரிகள் உடனடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினர். சென்னை வள்ளூவர் கோட்டத்தில் பழுதான நீர் நிரப்பும் நிலையத்தை இன்று சரிசெய்தனர். மேலும் லாரிகளுக்கு தாமதமின்றி நீர் நிரப்ப ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை லாரி உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
மேலும் சென்னை மெட்ரோ குடிநீர் வினியோகம் செய்யும் லாரிகளின் உரிமையாளர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். இதன்மூலம் நாளை வழக்கம்போல் சென்னையின் அனைத்து இடங்களுக்கும் மெட்ரோ குடிநீர் லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள்












Click it and Unblock the Notifications