சென்னைக்கு சரிபட்டு வராது.. டபுள் டெக்கர் ஓபன் டாப் பஸ் திட்டத்தை கைவிடும் எம்டிசி.. பயணிகளுக்கு ஏமாற்றம்
சென்னை: சென்னையில் பயணிகள் பயண அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், "டபுள் டெக்கர் ரூப் டாப் ஓப்பன் பஸ்களை" இயக்க திட்டமிட்டது. அதாவது இரண்டு அடுக்கு கொண்ட பேருந்தின் மேல் பகுதி திறந்த வெளியாக கொண்ட வடிவமைப்புடன் கூடிய பேருந்தை இயக்க போக்குவரத்து முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் அடிக்கும் வெயிலை கருத்தில் கொண்டு இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
சென்னையில் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் விதமாகவும் சென்னை நகரின் போக்குவரத்து கட்டமைப்பை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் வகையிலும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னை போக்குவரத்து வசதி
சென்னையில் நவீன தாழ்தள பேருந்துகள், மின்சார பேருந்துகள், ஏசி பேருந்துகள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அண்மையில், சொகுசு பிரீமியம் பேருந்து சேவையை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்தது. கண்டக்டர் இல்லாத இந்த பேருந்தில், சென்னை ஒன் செயலி வழியாக டிக்கெட்டை முன்பதிவு செய்து பயணிக்க முடியும்.
சென்னை திருவான்மியூரில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலும், நாவலூர் சிறுசேரி ஐடி பார்க்கில் இருந்து சென்னை கோயம்பேடு வரையிலும் என இரண்டு வழித்தடங்களில் இந்த பீரிமியம் கோல்டன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, சென்னையில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக உலா பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது.
ஓபன் டாப் பேருந்துகள்
சென்னை மெரினா, எழிழகம் வழித்தடத்தில் இந்த பேருந்து இயக்கப்படுகிறது. சென்னையில் முக்கிய சுற்றுலா மையங்களை பார்க்கும் விதமாக இந்த பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் வெளிநாடுகளில் இயக்கப்படுவது போல ஓபன் டாப் பேருந்துகளை இயக்குவதற்கும் அரசு முடிவு செய்தது. இரண்டு அடுக்கு கொண்ட இந்த பேருந்தில் மேல்பகுதியில் திறந்த வெளியுடன் சென்னை அழகை ரசித்தபடி பயணம் செய்யும் விதமாகவும் இயக்க முடிவு செய்யப்பட்டது.
கேரளாவின் மூணாறு போன்ற மலைப்பகுதிகளில் இயற்கை அழகை ரசித்தபடி செல்ல இதுபோன்ற ஓபன் டாப் பஸ்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இதே போன்ற பயண அனுபவத்தை சென்னை பயணிகளுக்கு கொடுக்கவும் திட்டமிட்டு இந்த வகை பேருந்துகளை இயக்குவது தொடர்பாக சென்னை மாநரக போக்குவரத்து கழகம் பரிசீலித்து வந்தது.
திட்டம் கைவிடப் பட்டது
எனினும், சென்னையில் நிலவும் தட்ப வெப்ப நிலை ஓபன் டாப்பில் பயணிகளுக்கு ஏற்றதாக இருக்காது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டதால் இதனை ஏற்று திட்டத்தை கைவிட்டுள்ளது. இடத்திற்கு பதிலாக 20 டபுள் டெக்கர் ஏசி பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 4 மாதங்களுக்குள் இந்த பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறும் விதமாகவும் பேருந்துகள் நவீன வடிவமைப்புடன் செயல்பட்டுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக 4 நான் ஏசி ரூப் டாப் பஸ்களையும் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒரு கிலோ மீட்டர் அடிப்படையில் பஸ் ஆபரேட்டர்களுக்கு பணம் வழங்கப்படும். பேருந்துகளை இயக்குவது மட்டும் இன்றி பராமரிப்பு, சார்ஜிங் உள்கட்டமைப்பு உருவாகுதல் ஆகியவையும் ஆபரேட்டர்களின் பொறுப்பேயாகும் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தம் முதலில் வெளியிடப்பட்ட நிலையில், அதை மாற்றம் செய்து கடந்த மாதம் மீண்டும் டெண்டர் விடப்பட்டது.
முதலில் வெளியிடப்பட்ட ஒப்பந்தத்தில் டபுள் டெக்கர் மின்சார பேருந்துகள் மட்டுமே திட்டமிட்டு இருந்தன. ஏசி பேருந்துகளுக்கு ஒரு கட்டணமும் ஓபன் டாப் பேருந்துகளுக்கு ஒரு கட்டணமும் நிர்ணயிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஓப்பன் ரூப் டாப்கள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது பயணிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
தங்கம் விலை இன்னும் 30 சதவீதம் சரிய போகுது.. இன்ப அதிர்ச்சி தந்த நகை வியாபாரிகள் சங்க தலைவர் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
இந்தியாவின் பெரிய ரிங் ரோட்டில்.. வருது ராட்சச ரயில் பாதை.. தமிழக அரசு கிரீன் சிக்னல்! தரமான முடிவு -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு














Click it and Unblock the Notifications