சென்னை மக்களே உஷார்.. பொதுமக்களை நூதன முறையில் ஏமாற்றிய பணமோசடி.. யார் இந்த பீட்டர்?
சென்னை: சென்னை தி நகர் நகைக்கடை உரிமையாளர், கல்லூரி மாணவியின் தாய் உள்பட பலரையும் ஏமாற்றி நூதன முறையில் ஏமாற்றி பல லட்சம் ரூபாயை மோசடி செய்த பீட்டர் என்பரை நீலாங்கரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி பெயர் உமா (வயது 48). இந்த தம்பதிக்கு அமிர்தா என்ற மகள் உள்ளார். இவர் BASLP என்ற படிப்பை முடித்தார்.

அதன்பிறகு தனியார் மருத்துவ கல்லூரியில் M.sc Speech Language Pathology என்ற மேல்படிப்புக்கு விண்ணப்பம் செய்தார். நுழைவு தேர்வுக்கு தயாரானார்.
அப்போது உமாவின் குடும்ப நண்பர்களான கண்ணன் வழியாக அவரது நண்பர் பீட்டர் அமிர்தாவுக்கு தனியார் கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறினர். மேலும் ரூ.10 லட்சம் தந்தால் கல்லூரியில் சீட் உறுதி செய்யலாம் என்று கூறினார்.
இதையடுத்து உமா 2 தவணைகளாக முதலில் ரூ.4 லட்சம், அதன்பிறகு ரூ.6 லட்சம் என்று மொத்தம் ரூ.10 லட்சத்தை வங்கி கணக்கிற்கு மாற்றினார். கடந்த 2025 மே மாதம் 30, 31 ஆகிய தேதிகளில் இந்த பணம் பீட்டரின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டது. பிறகு ஜூன் 26ல் அமிர்தா நுழைவு தேர்வு எழுதி 61.67 மதிப்பெண் பெற்றார். ஆனால் கவுன்சிலிங்கிற்கு அவர் அழைக்கப்படவில்லை.
பீட்டரிடம் கேட்டபோது 2வது கட்ட கவுன்சிலிங்கிற்கு அழைப்பு வரும் என்று கூறினார். பிறகு ஜூலை 31ம் தேதி ரூ.1.65 லட்சம் கேட்டதால் மீண்டும் வழங்கினார். ஆனால் கல்லூரியில் இருந்து M.sc Audiology படிப்புக்கான கவுன்சிலிங்கிற்கு அழைப்பு சென்றது. ஆனால் அதனை அவர்கள் ஏற்கவில்லை. இதனால் மீண்டும் பீட்டரிடம் கேட்டனர். அதற்கு அவர் 2 நாட்கள் காத்திருக்கும்படி கூறியுள்ளார்.
பிறகும் கூட M.sc Speech Language Pathology படிப்புக்கான கவுன்சிலிங்கிற்கு அழைப்பு வரவில்லை. பீட்டரிடம் பேசினார்கள். அதற்கு அவர் நீங்கள் கொடுத்த பணத்துக்கு M.sc Audiology கவுன்சிலிங் வந்துள்ளது. அதில் சேர்ந்து படிக்கும்படி கூறிவிட்டு மீண்டும் பேசுவதை தவிர்த்தார். கண்ணனிடம் பேசும்படி கூறி போனை துண்டித்தார்.
இப்படியாக உமா, பீட்டரிடம் ரூ.11.65 லட்சத்தை கொடுத்து ஏமாந்தார். இதுதொடர்பாக உமா சார்பில் நீலாங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பீட்டரை அதிரடியாக கைது செய்துள்ளனர். கைதான பீட்டர், உமா மட்டுமின்றி பலரையும் ஏமாற்றி உள்ளார்.
பீட்டரின் முழு பெயர் பீட்டர் ்அறிவரசன் என்பது தெரியவந்தது. அதோடு அவர் பொதுமக்களை ஏமாற்றி பல லட்சங்களை மோசடி செய்திருப்பதும் அம்பலமானது. அதன்படி சென்னை தி நகரில் நகைக்கடை வைத்திருக்கும் சந்தோஷ் ஜார்ஜ் என்வபவரிடம் தங்க நகை வாங்கி கொண்டு காசோலையை பயன்படுத்தி மோசடி செய்துள்ளார். அதேபோல் டாக்டர் சரணவன் என்பவரிடம் வங்கியில் ஏலம் விடப்படும் தங்க நகைகளை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி ரூ.43லட்சத்தை மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications