அடுத்த அதிர்ச்சி.. சென்னையில் தூக்கில் தொங்கிய மாணவி! கல்லூரி முன் திரண்ட கூட்டம் - போலீஸ் குவிப்பு
சென்னை: தனியார் நர்சிங் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவேற்காடு அருகே விடுதியுடன் இயங்கி வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் 50க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் ஈரோட்டை சேர்ந்த மாணவி 2 ஆம் ஆண்டு நர்சிங் படித்து வந்துள்ளார். விடுதியில் தங்கி படித்து வந்த இவர், இன்று மதியம் சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு சென்று இருக்கிறார்.

நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து வெளியே வராததால் சக மாணவிகள் அவரை அழைக்க அறைக்கு சென்று இருக்கிறார்கள். அங்கு மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு சக மாணவிகள் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறைக்கும் கல்லூரி நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தகவலறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவி மரணம் தொடர்பாக மாணவியின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களும் பொதுமக்களும் அங்கு திரண்டு வருகின்றனர். அசம்பாவீதம் ஏற்படாமல் தவிர்க்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications