Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் கொடுமை- கொரோனாவிலிருந்து குணமடைந்தவரின் வீட்டை தகரம் அடைத்து மூடிய பல்லாவரம் நகராட்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவரின் வீட்டு கதவை நகராட்சி அதிகாரிகள் தகரத்தால் மூடி அடைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புறநகர் பகுதியான குரோம்பேட்டை புருஷோத்தமன் நகரில் பாதல் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற சென்றிருந்தார்.

Chennai Pallavaram civic body seals Corona Patient House with tin sheets

அவர் 14 நாட்கள் கொரோனா சிகிச்சை முடிந்த பின்னர் இன்று புருஷோத்தமன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கு திரும்பினார். அப்போது திடீரென பல்லாவரம் நகராட்சி ஊழியர்கள் அங்கு வந்தனர்.

கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையிலும் அந்த குடியிருப்பு வளாகத்தின் ஒருபகுதியை நகராட்சி பணியாளர்கள் அடைக்க முயன்றனர். ஆனால் அப்பகுதி மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கொரோனா சிகிச்சை பெற்ற நபரின் வீட்டு வாசலை தகரம் அடைத்து மூடிவிட்டனர் நகராட்சி பணியாளர்கள். இது அந்த குடியிருப்புவாசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

எந்த ஒரு தேவைக்குமே அந்த வீட்டில் இருப்பவர்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறையில் புகார் தரப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+