சென்னை மக்களே.. மார்ச் 31க்குள் இந்த 6 விஷயத்தை முடித்து விடுங்க.. இல்லாவிட்டால் பெரும் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024-25ம் நிதியாண்டு வரும் மார்ச் 31ம் தேதிக்குள் முடிவுக்கு வருகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதல் 2025-26 நிதியாண்டு பிறக்க உள்ளது. இதனால் ஏப்ரல் 1ம் தேதி முதல் பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளது. இப்படியான சூழலில் தான் சென்னையில் வசிக்கும் மக்கள் மார்ச் 31ம் தேதிக்குள் 6 முக்கிய விஷயங்களை முடித்து விட வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் உள்பட பிற சிக்கல்களில் சிக்க நேரிடும்.

புதிய நிதியாண்டு என்பது ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கி மார்ச் 31ம் தேதி முடிவடையும். அந்த வகையில் இப்போது 2024-25 நிதியாண்டு நடந்து வருகிறது. இந்த நிதியாண்டு என்பது மார்ச் 31ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. அதன்பிறகு புதிய நிதியாண்டான 2025-26 ஏப்ரல் 1ம் தேதி பிறக்க உள்ளது.

chennai-people-must-complete-these-6-financial-tasks-by-2025-march-31-full-details-here

ஒவ்வொரு புதிய நிதியாண்டிலும் கூட வங்கிகள், ஏடிஎம், பணப்பரிமாற்றம் செயலிகள் உள்பட பல்வேறு பொருளாதாரம் சார்ந்த திட்டங்களில் மாற்றம் என்பது மேற்கொள்ளப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் பல திட்டங்களில் மாற்றம் என்பது அமலுக்கு வர உள்ளது. இப்படியான சூழலில் தான் சென்னையில் வசிக்கும் மக்கள் மார்ச் 31ம் தேதிக்குள் 6 முக்கிய விஷயங்களை முடித்துவிட வேண்டும்.

முதல் விஷயம்

அதில் முதல் விஷயம் என்னவென்றால் சொத்து வரி பாக்கியை செலுத்துதல். சென்னை மாநகராட்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி செலுத்த வேண்டும். இந்த சொத்து வரியை மார்ச் 31ம் தேதிக்குள் மக்கள் செலுத்த வேண்டும். காலதாமதமின்றி இந்த வரியை செலுத்தும் பட்சத்தி்ல அபராதம் விதிக்கப்படுவதில் இருந்து தப்பிக்க முடியும்.

2வது விஷயம்

சென்னையில் தொழில் செய்து வரும் நபர்கள் தொழில்முறை சார்ந்த வரி பதிவை (Professional Tax Registration) புதுப்பிக்க வேண்டும். அதுமட்டுமின்றி தொழில் வரியை செலுத்தி பாக்கி இன்றி பார்த்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

3வது விஷயம்

2024-25 நிதி ஆண்டு முடிவதற்கு முன்பாக வீடு, கடை, தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு கட்டண முறையை சரி பார்த்து கொள்ள வேண்டும். ஏதாவது பெண்டிங் பில் இருப்பின் உடனடியாக செலுத்த வேண்டும். இதன்மூலம் மின்சேவை துண்டிக்கப்படுவதில் இருந்து தப்பிக்க முடியும்.

4வது விஷயம்

சென்னை குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் பெண்டிங் பில் உள்ளதா என்பதை சரி செய்து கொள்ள வேண்டும். பாக்கி இருப்பின் அதனை உடனடியாக செலுத்த வேண்டும். இதன்மூலம் தாமத கட்டணத்தை தவிர்ப்பதோடு, தொடர்ச்சியான குடிநீர் சேவையை இடையூறு இன்றி பெற முடியும்.

5வது விஷயம்

தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி பில்லிங்கை சரிபார்க்க வேண்டும். தொழில் செய்வார் ஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் பைல் செய்ய வேண்டிய கட்டாயம். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் சரக்கு மற்றும் சேவை வரியை மார்ச் 31ம் தேதிக்கு முன்பாக சரிபார்த்து கொள்ள வேண்டும்.இதன்மூலம் அபராதத்தை தவிர்க்க முடியும்.

6வது விஷயம்

இதில் கடைசி விஷயம் என்னவென்றால் தமிழ்நாடு அரசின் சேமிப்பு திட்டங்கள். தமிழ்நாடு அரசு சார்பில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் வைப்புத்தொகை (Fixed Deposits) திட்டங்கள் உள்ளன. இதில் வட்டி நன்றாக தரப்படும். அதோடு வரி விலக்கு உண்டு. இதனால் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய தயாராகலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+