ஹெல்மெட் போடாட்டி போலீசுக்கும் இனி சிக்கல் தான்.. அதிரவைத்த சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்தரவு
சென்னை: இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அனைத்து போலீசாரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், அணியாத போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்று முதலே தமிழகம் முழுவதும் போலீசார் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை விரட்டி விரட்டி பிடித்து அபாரதம் வசூலித்து வருகிறார்கள்.

சென்னை,கோவை, மதுரை, திருச்சி,சேலம் என அனைத்து மாநகரங்களிலும் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளார்கள். குறிப்பாக சென்னையில் மிகத்தீவிரமாக வாகன சோதனை நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் சிலர் சண்டையும் போடுகிறார்கள்.
இதனிடையே எங்களை ஹெல்மெட் அணியச் சொல்லி கட்டாயப்படுத்தும் போலீசார் ஹெல்மெட் அணிகிறார்களா, அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பொதுமக்கள் பலரும் முணுமுணுத்துபடி சென்று வருகிறார்கள். இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவில் போலீசாரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று வெளியிட்ட உத்தரவில், சென்னை மாநகரில் உள்ள அனைத்து போலீசாரும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாத போலீசார் மீது போக்குவரத்து போலீசாருக்கு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, ஹெல்மெட் போடாமல் சென்றால் இனி போலீசுக்கும் சிக்கல் தான் என்பது உறுதியாகி உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications