Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வளசரவாக்கத்தில் 6 ஆண்டாக விபச்சாரம்.. முன்னணி நடிகைக்கு ஒரு மணி நேரத்திற்கு ரேட் பேசிய "போலீஸார்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் ஒரு குடியிருப்பில் சீரியல் நடிகைகளை வைத்து 6 ஆண்டுகளாக விபச்சாரம் நடந்து வந்த நிலையில் துணை நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் பிழைப்புக்காக வேலை தேடி கிராமங்களில் இருந்து நிறைய இளம்பெண்கள் வருகிறார்கள். அவர்களை சிலர் சினிமாவிலும், சீரியல்களிலும் நடிக்க வைப்பதாக கூறி ஆசைவார்த்தை காட்டுகிறார்கள்.

Chennai police found that prostitution done in Valasaravakkam

சினிமா இயக்குநர் வந்திருப்பதாக கூறி யாரோ ஒருவரை காட்டி அடுத்த படத்திற்கு நீதாம்மா ஹீரோயின் என சொல்லி அந்த இளம்பெண்ணை மூளைச் சலவை செய்து படுக்கையை பகிர வைக்கிறார்கள். இது தொடர்கதையாகிறது.

இதன் மூலம் நிறைய பணம் கிடைப்பதால் ஏழை மக்கள் தங்கள் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு விபச்சாரத்தில் சட்டவிரோதமாக ஈடுபடுகிறார்கள். இவர்களை போல் சினிமாவில் போதிய வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் இது போல் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அது போல் மசாஜ் சென்டர்கள், ஸ்பாக்கள் என்ற பெயரிலும் விபச்சாரம் நடக்கிறது. சென்னை வளசரவாக்கம் அன்பு நகரில் உள்ள அபார்ட்மென்ட் உள்ளது. இங்கு அடிக்கடி ஒரு வீட்டிற்கு மட்டும் இளைஞர்கள் சென்று வருகிறார்கள் என தகவல் கிடைத்தது. இதையடுத்து விபச்சார தடுப்பு பிரிவு போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் ரகசிய தகவல்களை கொடுத்தனர்.

இதையடுத்து குடியிருப்புக்குள் சென்ற போலீஸார் அங்கு விசாரணை நடத்தினர். அதில் 6 ஆண்டுகளாக விபச்சார தொழில் நடந்து வருவதாக தெரிகிறது. இதையடுத்து இவர்களை கைது செய்ய போலீஸ் கெட்டப்பில் சென்றால் தப்பிவிடுவர் என்பதால் வாடிக்கையாளர் போல் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

அப்போது மறுமுனையில் பேசிய நபர் ஒருவர் முன்னணி நடிகைகள் என்றால் ஒரு மணி நேரத்திற்கு ரூ 25 ஆயிரம் , துணை நடிகைகளுக்கு ரூ 10 ஆயிரம் என கூறியுள்ளார். முன்னணி நடிகை வேண்டும் என்றால் ஒரு நாள் முன்பே சொல்ல வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் இப்போதைக்கு துணை நடிகை மட்டும்தான் இருக்கிறார்.

Chennai police found that prostitution done in Valasaravakkam

அவர் வேண்டுமென்றால் ரூ 10 ஆயிரம் செலவாகும் என கூறியுள்ளார். இதையடுத்து அந்த துணை நடிகை தனக்கு ஓகே என சொல்லிய போலீஸ்காரர், வீட்டு முகவரியை வாங்கிக் கொண்டு போன் இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து காவலர் ஒருவரை வாடிக்கையாளர் போல் முதலில் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுப்பினர்.

அவரை மற்ற போலீஸார் மாறுவேடத்தில் பின்தொடர்ந்து வந்தனர். அப்போது அங்கு ஒரே ஒரு துணை நடிகை மட்டும் இருந்தார். அவரை போலீஸர் கைது செய்தனர். அவரிடம் இருந்த 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+