Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

75 ஆண்டுகளுக்கு பின்.. சென்னையில் கம்பேக் கொடுக்கும் டிராம் சேவை.. எங்கெல்லாம் வருகிறது? சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஒரு காலத்தில் இருந்து பின்னர் கைவிடப்பட்ட டிராம் சேவை மீண்டும் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முயற்சி நகரத்தின் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, தி. நகர், நுங்கம்பாக்கம், நந்தனம், மற்றும் கலங்கரை விளக்கம் வரையிலான 15.4 கிலோமீட்டர் தூரத்திற்கு நவீன டிராம் பாதை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது நகரத்தின் நெரிசலான பகுதிகளில் பயண அனுபவத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

metro

90 களின் நடுப்பகுதியில் நிறுத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போக்குவரத்துச் சேவை, நகரத்தில் மீண்டும் இயங்கவுள்ளது. தியாகராய நகர், நுங்கம்பாக்கம், நந்தனம் மற்றும் கலங்கரை விளக்கம் உள்ளிட்ட 15.4 கிலோமீட்டர் தொலைவிலான தற்காலிக வழித்தடத்தை அரசு அடையாளம் கண்டுள்ளது.

சென்னை டிராம் சர்வீஸ் - ஆய்வு விரைவில்

இறுதி வழித்தடம், பணிமனை அமைவிடங்கள் மற்றும் தொழில்நுட்பத் தேவைகள் குறித்து விரிவான சாத்தியக்கூறு ஆய்வு விரைவில் முடிவு செய்யும். இரண்டு டிராம் பணிமனைகள் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆய்வு முடிந்த பிறகு அவற்றின் சரியான இடங்கள் உறுதி செய்யப்படும்.

இந்தத் திட்டம், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து விருப்பத்தையும் வழங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இது சென்னையின் தற்போதைய போக்குவரத்து அமைப்பிற்குள் எளிதாக ஒருங்கிணைக்கப்படும்.

வரலாற்றுப் பின்னணியுடன் வரும் இந்தத் திட்டம், சென்னைக்கு ஒரு சிறப்பு சேர்க்கிறது. முன்பு மதராஸ், இந்தியாவின் முதல் மின்சார டிராம் அமைப்பை உருவாக்கியது. மதராஸ் டிராம்வே நிறுவனம் தான் நாட்டின் முதல் டிராம்வேகளை உருவாக்கியது. இது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து சுமார் 67 ஆண்டுகள் செயல்பட்டது.

சென்னை டிராம்வே

மதராஸ் எலக்ட்ரிக் டிராம்வே நிறுவனம் 1892 இல் உருவாக்கப்பட்டது. முதல் தண்டவாளப் பணிகள் 1894 இல் தொடங்கப்பட்டன. முதல் மின்சார டிராம் சேவை 1895 மே மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இதனால், இது இந்தியாவின் முதல் மின்சார டிராம்வே அமைப்பானது. 1904 ஆம் ஆண்டில், தேவை அதிகரித்ததால் இந்த அமைப்பு மேலும் விரிவடைந்தது. மின்சார டிராம்கள் நகரம் முழுவதும் பிரபலமான போக்குவரத்து முறையாக மாறின. பின்னர் செயல்பாட்டு காரணங்களால் 1950களில் சென்னையில் டிராம்வே சர்வீஸ் நீக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் சென்னை பெருநகரப் பகுதிக்கான ரூ. 2.5 லட்சம் கோடி மதிப்பிலான விரிவான போக்குவரத்துத் திட்டத்திற்கு (CMP) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தத் திட்டம், சென்னையின் போக்குவரத்து திட்டங்களை விரிவுபடுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் 25 ஆண்டு கால செயல் திட்டத்தை வகுத்துள்ளது. அதாவது சென்னையில் பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோ திட்டத்தை விரிவு செய்வதற்கான மாஸ்டர் பிளான் வகுக்கப்பட்டது.

நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தின் (CUMTA) இரண்டாவது கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இந்த CMP திட்டத்தின்படி, சென்னை மெட்ரோவின் தற்போதைய 172 கி.மீ. தூர மெட்ரோ ரூட், 2048-ம் ஆண்டுக்குள் 444 கி.மீ. ஆக விரிவுபடுத்தப்படும்.

444 கிமீ தூரத்திற்கு விரிவாக்கப்படும் மெட்ரோ

இதில் தற்போது நடைபெற்று வரும் 54 கி.மீ. முதல் கட்டப் பணிகளும், 118 கி.மீ. இரண்டாம் கட்டப் பணிகளும் அடங்கும். கூடுதலாக, 152 கி.மீ. நீளத்திற்கு மெட்ரோ லைட் ரயில் வலைப்பின்னல் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

புறநகர் ரயில் சேவை மேம்பாட்டிற்காக, 182 கி.மீ. தூரத்திற்கு புதிய வழித்தடங்களும், தற்போதுள்ள 126 கி.மீ. தூர வழித்தடங்களை நவீனப்படுத்துவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும். இதுதவிர, 438 கி.மீ. தூரத்திற்கு பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்பு (BRTS) வலைப்பின்னலும் உருவாக்கப்படும். இந்த BRTS திட்டத்தில் ஆலந்தூர்/தாம்பரம் முதல் பரந்தூர் வரையிலும், காஞ்சிபுரம் முதல் செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி/கடலூர் வரையிலும், சென்னை சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி, ஸ்ரீ சிட்டி மற்றும் நெல்லூர் வரையிலும் முக்கிய இணைப்புகள் உருவாக்கப்படும்.

3 வகையான திட்டம்

CMP திட்டம், பணிகளை குறுகியகால, மத்தியகால, மற்றும் நீண்டகாலப் பிரிவுகளாகப் பிரித்துள்ளது. 2030-க்குள் நிறைவு செய்யப்பட வேண்டிய பணிகளுக்காக ரூ. 75,976 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான நிதி பொதுப் போக்குவரத்து விரிவாக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து, 2040-ம் ஆண்டு வரையிலான திட்டங்களுக்கு ரூ. 95,777 கோடியும், இறுதி கட்டமான 2048-ம் ஆண்டு வரையிலான முதலீடுகளுக்கு ரூ. 40,768 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+