“வானவில் எங்கள் அடையாளம்”.. சென்னையில் LGBTIQA+ மக்களின் உற்சாக பேரணி.. ஆடிப்பாடி கொண்டாட்டம்!
சென்னை: சென்னையில் LGBTIQA+ மக்களின் வானவில் பேரணி இன்று நடைபெற்றது. LGBTIQA+ சமூகத்தைச் சார்ந்தவர்களும், அவர்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உற்சாகமாக ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.
"வானவில் என்பதை நீங்கள் எங்களை அவமதிக்க பயன்படுத்தினால் அதையே நாங்கள் அடையாளமாக மாற்றிக் கொள்கிறோம்" என இந்தப் பேரணியில் பங்கேற்ற திருநங்கை ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதத்தில், Pride Month என்ற பெயரில் LGBTIQA+ மக்கள் ஒன்று கூடி பிரமாண்ட பேரணிகளை உலகெங்கிலும் நடத்தி வருகின்றனர். LGBTIQA+ மக்கள் தங்களுடைய உரிமைகளை வலியுறுத்தி சென்னையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று சுயமரியாதை பேரணியை நடத்தி வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டுக்கான சுயமரியாதை பேரணி இன்று சென்னையில் நடைபெற்றது. தங்களது உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி சென்னையில் இன்று 17 வது ஆண்டாக இந்தப் பேரணியை நடத்தினர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தொடங்கிய இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சென்னை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பிற ஊர்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பலரும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். குறிப்பாக இளம்பெண்கள் அதிகளவில் வந்திருந்தனர். ஏராளமான திருநங்கைகளும் ஆர்வத்துடன் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர். LGBTIQA+ மக்களின் பெற்றோரும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
ஆண், பெண், திருநங்கை, திருநம்பி என்ற பாலின வேறுபாடுகளை மறந்து தம் உணர்வுகளுக்கு தகுந்தாற்போல பல வண்ண ஆடை அணிந்து, சிகை அலங்காரம், முக அலங்காரம் செய்து பேரணியில் நடனமாடி மகிழ்ந்தனர். மேளம், தப்பு தாளம் முழங்க, ஆடிப்பாடி உற்சாகத்தில் திளைத்தனர்.
LGBTQ+ மக்கள் மட்டுமின்றி அவர்களின் உரிமைகளுக்காக போராடும் சமூக செயற்பாட்டாளர்களும் இதில் கலந்துகொண்டனர். பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் கோஷங்களை எழுப்பியவாறும், பதாகைகளை ஏந்தியவாறும் அவர்கள் பேரணியாகச் சென்றனர்.
வானவில் பேரணியில் பங்கேற்ற திருநங்கை ஒருவர் பேசுகையில், "17வது வானவில் சுயமரியாதை பேரணி மூலமாக நாங்கள் அரசிடம் வைக்கும் கோரிக்கை.. திருநங்கை, திருநம்பி, இடைபாலினத்தவருக்கு இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும். அதன் மூலம் என்னைப் போன்ற ஆசிரியர்கள் பணி வாய்ப்பை பெறுவோம்.
இப்போது வானவில் தோழர்கள், வானவில் நண்பர்கள் என கேலி கிண்டல் செய்ய பயன்படுத்துகிறார்கள். அதனை நாங்கள் அவமானமாக கருதவில்லை. கொச்சையாக சொல்லி வந்த காலம் போய் எங்களை தோழர் என்றும் நண்பர் என பயன்படுத்துவதை வெற்றியாகவே பார்க்கிறோம். வானவில் என்பதை நீங்கள் எங்களை அவமதிக்க பயன்படுத்தினால் அதையே நாங்கள் அடையாளமாக மாற்றிக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications