பொறிவைத்து காத்திருந்த புருஷன் பொண்டாட்டி! பக்கத்து வீட்டுக்குள்ள போய்:ஒரே அசிங்கமா போச்சு குமாரு!
சென்னை: சென்னை ராமபுரத்தில் வீட்டின் பூட்டை உடைக்காமல், லாவகமாக கைவரிசை காட்டிய கொள்ளையனை, வீட்டுக்குள் மறைந்து இருந்து, மனைவியுடன் சேர்ந்து பொறி வைத்து வைத்து பிடித்துள்ளார் ஆட்டோ டிரைவர்.
சென்னை ராமாபுரம், அன்னை சத்யா நகர், 4-வது தெருவில் வசித்து வரும் 40 வயதாகும் நல்லசிவம், அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அண்மையில் இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்று இருந்தார். இரவு வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதேபோல் அடுத்தடுத்து 3 முறை அவரது வீட்டில் இருந்து சுமார் ரூ.20 ஆயிரம் வரை நல்ல சிவம் வீட்டில் திருடுபோய் இருந்தது. வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்படாமல் அப்படியே உள்ளே புகுந்து யாரோ திருடி இருப்பதும் நல்லசிவத்துக்கு தெரியவந்தது.
வீட்டில் இருந்து ஆட்கள் வெளியே சென்றதும், அதனை நோட்டமிட்டு மர்மநபர் சில நிமிடங்களில் கொள்ளை அடித்து விட்டு எஸ்கேப் ஆவதும் தெரியவந்தது. இதையடுத்து நல்ல சிவம் வீட்டில் தொடர்ந்து கைவரிசை காட்டிவரும் கொள்ளையனை கையும் களவுமாக பொறி வைத்து பிடிக்க முடிவு செய்து இதுபற்றி தனது மனைவியிடம் தெரிவித்தார். பின்னர் இருவரும் சேர்ந்து கொள்ளையனை பிடிக்க திட்டமிட்டமிட்டார்கள்
பின்னர் இருவரின் யோசனைப்படி சம்பவத்தன்று நல்லசிவம் வீட்டுக்குள் மறைந்து இருந்து கொண்டு, மனைவியை மட்டும் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே செல்லுமாறு கூறினார். அதன்படி வழக்கம்போல் நல்லசிவத்தின் மனைவி வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு எதுவும் தெரியாததுபோல வெளியே சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் அங்குவந்த மர்மநபர் ஒருவர், நல்லசிவம் வீட்டின் பூட்டை உடைக்காமல் லாவகமாக கதவை திறந்து உள்ளே சென்றார். வீட்டுக்குள் மறைந்து இருந்த நல்லசிவம், கொள்ளையன் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் உரிமையாளர் இருப்பதை பார்த்து திடுக்கிட்ட கொள்ளையன், அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளான்.

பல நாள் திருடன் ஒரு நாள் சிக்கியதால் ஆவேசம் அடைந்த நல்லசிவம், பாய்ந்து சென்று கொள்ளையைனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினரும் கொள்ளையனுக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் பிடிபட்ட கொள்ளையன் யார் என்று பார்த்தால் நல்லசிவத்தின் பக்கத்து வீட்டில் வாடகைக்கு வசிக்கும் மணிகண்டன்(26) என்பது கண்டுபிடிக்கப்பபட்து. அவரை ராமாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
போலீசார் மணிகண்டனிம் நடத்திய விசாரணையில், இளநீர் வியாபாரம் செய்து வந்த மணிகண்டனுக்கு. ஜாலியாக இருக்க பணம் போதவில்லையாம். இதனால் அருகில் இருந்த வீட்டில் திருடி செலவு செய்ய விரும்பி இருக்கிறார். இதற்காக நல்லசிவம் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றதும் மணிகண்டன், பூட்டை உடைக்காமல் பூட்டை பிடித்து இழுத்து கதவை லாவகமாக திறந்து வீட்டுக்குள் புகுந்து கைவரிசை காட்டி வந்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னதாக வீட்டில் இருந்த பணம் சிறுக சிறுக மாயமானதால் நல்லசிவமும், அவருடைய மனைவியும் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் அடைந்திருக்கிறார். அதன்பிறகு தொடர்ந்து பணம் மாயமானதால் வெளியில் இருந்து வந்த திருடனே திருடியிருக்கிறார் என்று கண்டுபிடித்து, அவரை பொறி வைத்து பிடித்து இருக்கிறார்கள். கைதான மணிகண்டன், நல்லசிவம் வீட்டில் 3 முறை கைவரிசை காட்டி இருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications