Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முடிவிற்கு வரும் பிரச்சனை.. மொத்தமாக மாறுது சென்னையின் பிரதான சாலைகள்.. வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிசம்பர் 2023 வெள்ளத்தில் சேதமடைந்த சாலைகளின் சில பகுதிகளை சரிசெய்து மீண்டும் சாலைகள் அமைக்கும் பணியை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை தொடங்கியுள்ளது.

20 கோடி செலவில் நகர சாலைகளில் மொத்தம் 28 திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. வானகரம் - அம்பத்தூர் - புழல் சாலை, வேளச்சேரி - தாம்பரம் சாலை, மாதவரம் - ரெட் ஹில்ஸ் சாலை, தாம்பரம் - முடிச்சூர் சாலை மற்றும் மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை ஆகியவை சீரமைக்கப்பட உள்ளன.

Chennai roads are going to getting better that affected due to heavy rain and flood

சென்னையில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நீண்ட பராமரிப்பு, மாற்றம் செய்ய வேண்டிய பணிகளை மட்டும் இப்போது செய்து வருகிறோம்.

கோடைகாலம் தொடங்கி சாலையின் மேற்பரப்பு முழுமையாக வறண்டு போகும் வரை காத்திருக்க வேண்டியிருந்ததால், இப்போது இதைச் செய்கிறோம். ஒன்பது மாவட்டங்களில் சீரமைப்புப் பணிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை போதுமானதாக இல்லை, பெரும்பாலும் மாநில நிதியில் இருந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உள்வட்டச் சாலையின் தெற்குப் பகுதியின் சாலை பகுதிகளும் சீரமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. குறைந்த போக்குவரத்து இருக்கும் இரவுகளில் நாங்கள் வேலை செய்வோம், இதனால் திசைதிருப்பல்கள் எளிதாக இருக்கும். சீரமைப்பு பணிகள் முடிவடைய 10 நாட்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாநகர சாலைகளில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், 5.8 கி.மீ., தூரத்துக்கு, 4.5 கோடி ரூபாயும், ஜவஹர்லால் நேரு சாலை (ஐ.ஆர்.ஆர்.,) 3.4 கி.மீ., தூரத்துக்கு, 3 கோடி ரூபாயும், அம்பத்தூர் - வானகரம் - புழல் சாலைக்கு, 1.7 கோடி ரூபாயும், திருவொற்றியூர் - பொன்னேரி - பஞ்செட்டி சாலை. 1 கோடி ரூபாயும் மராமத்து பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் தமிழகம் முழுவதும் தற்காலிக சாலைப் பணிக்காக தமிழக அரசு ஒதுக்கிய ₹250 கோடியில் திருவள்ளூர் மாவட்டத்துக்கு ₹25.17 கோடியும், செங்கல்பட்டில் சாலைகள் சீரமைக்க ₹11 கோடியும். காஞ்சிபுரத்தில் சாலைகளுக்கு 9.10 கோடி ரூபாய். தூத்துக்குடிக்கு மொத்தம் ₹117.42 கோடியும், திருநெல்வேலிக்கு 31.82 கோடியும் ஒதுக்கப்பட்டது.

வேகமான பணிகள்: சாலை சீரமைப்பு பணி: சென்னையில் தொடர் மழை வெள்ளம் முடிந்து உள்ள நிலையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சேதம் அடைந்த சாலைகள் சிமெண்ட் சாலைகள் மூலம் பேட்ச் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் உடனுக்குடன் குழிகள் மூடப்படுகின்றன. தற்போது புதிய சாலைகளை போட தொடங்கி உள்ளனர்.

தமிழ்நாடு முழுக்க பல்வேறு காரணங்களுக்காகக் சாலை பணிகள் நடந்து வருகின்றன. சாலைகளை விரிவு செய்வது, பாதாள சாக்கடை அமைப்பது, கழிவு நீர் குழாய்களை அமைப்பது, கேபிள் அமைப்பது, மழை நீர் வடிகால் அமைப்பது, மின்சார வடங்களை அமைப்பது, பாலம் கட்டுவது என்று பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த பணிகள் அனைத்தையும் அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன்படியே பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில்தான் சென்னையில் மழை காரணமாக சேதமடைந்த சாலைகளை உடனுடக்குடன் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+