ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ பாஸ்... சென்னையை நோக்கி படையெடுக்கும் வாகனங்களால் கடும் நெரிசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இ பாஸ் வழங்கப்படுவது எளிமையாக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையை நோக்கி வாகனங்கள் படையெடுப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Recommended Video

    August 17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் E-Pass- முதல்வர் அதிரடி | OneindiaTamil

    தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனாலும் மாவட்டங்களிடையேயான போக்குவரத்துக்கு இ பாஸ் அவசியம் என்கிற நடைமுறை பின்பற்றப்பட்டது.

    Chennai roads see a surge in traffic after E pass relaxation

    இந்த இ பாஸ் விவகாரம் பெரும் பிரச்சனையாக வெடித்தது. இ பாஸ் பொதுவாக யாருக்கும் கிடைக்கவில்லை; பணம் கொடுத்தால்தான் கிடைக்கிறது என்கிற புகாரும் எழுந்தது. இதனால் இ பாஸ் நடைமுறையை எளிதாக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

    இதனை ஏற்ற தமிழக அரசு ஆகஸ்ட் 17-ந் தேதி முதல் இ பாஸ் நடைமுறைகளில் தளர்வை அமல்படுத்தியது. இதனால் நேற்று ஒரே நாளில் மொத்தம் 1.20 லட்சம் பேருக்கு இ பாஸ் கிடைத்தது.

    இ பாஸ் எளிதாக கிடைப்பதால் சென்னைக்கு திரும்பி வருவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பேருந்து, ரயில் போக்குவரத்து இல்லாததால் வாகனங்கள் மூலம்தான் சென்னைக்கு வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் சென்னை வரும் சாலைகள் அனைத்தும் வாகனங்களால் நிறைந்து காணப்பட்டது.

    சுங்க சாவடிகளில் வாகனங்கள் மிக மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலைதான் இருந்தது. பல இடங்களில் வாகனப் போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தி அனுப்பி வைத்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+