தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்?.. சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் குவிந்த 500 போலீஸ்
சென்னை: சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி தூய்மைப் பணியாளர்கள் ஏற்கனவே 13 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, இன்று காலை 9 முதல் 10 மணியளவில் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடவுள்ளதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, சென்னை ரிப்பன் மாளிகையில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில், 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தரப்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து நீண்ட போராட்டத்தை தொடங்கினர். ஏற்கனவே 13 நாட்கள் போராட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து, உடனடியாக போராட்டத்தைக் கலைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவன்று தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டம் தொடர்பாக பெரியமேடு மற்றும் வேப்பேரி காவல் நிலையத்தில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாளே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வெற்றி என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு விருந்து வைக்கப்பட்டது.
ஆனால், தூய்மைப் பணியாளர்கள் இந்த கோரிக்கையை கைவிடப் போவதில்லை என்றும், போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். இந்நிலையில், இன்று காலை 9 முதல் 10 மணியளவில் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதைத்தொடர்ந்து, சென்னை ரிப்பன் மாளிகையில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ரிப்பன் மாளிகையில் 5 துணை ஆணையர்கள் தலைமையில் 500 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய ஏதுவாக காவல் ரோந்து வாகனங்கள், மாநகரப் பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications