தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்?.. சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் குவிந்த 500 போலீஸ்
சென்னை: சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி தூய்மைப் பணியாளர்கள் ஏற்கனவே 13 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, இன்று காலை 9 முதல் 10 மணியளவில் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடவுள்ளதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, சென்னை ரிப்பன் மாளிகையில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில், 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தரப்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து நீண்ட போராட்டத்தை தொடங்கினர். ஏற்கனவே 13 நாட்கள் போராட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து, உடனடியாக போராட்டத்தைக் கலைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவன்று தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டம் தொடர்பாக பெரியமேடு மற்றும் வேப்பேரி காவல் நிலையத்தில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாளே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வெற்றி என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு விருந்து வைக்கப்பட்டது.
ஆனால், தூய்மைப் பணியாளர்கள் இந்த கோரிக்கையை கைவிடப் போவதில்லை என்றும், போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். இந்நிலையில், இன்று காலை 9 முதல் 10 மணியளவில் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதைத்தொடர்ந்து, சென்னை ரிப்பன் மாளிகையில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ரிப்பன் மாளிகையில் 5 துணை ஆணையர்கள் தலைமையில் 500 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய ஏதுவாக காவல் ரோந்து வாகனங்கள், மாநகரப் பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications