இரவு முழுக்க வெளுத்தெடுத்த மழை.. சென்னையில் செம வானிலை.. எங்கெல்லாம் மழை பெய்தது!?
சென்னை: சென்னையில் இரவு முழுக்க பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னையின் வானிலை திடீர் என்று குளிர்ச்சியாக மாறியுள்ளது.
Recommended Video
கடந்த ஒன்றரை மாதமாக தமிழகத்தில் மிக கடுமையான வானிலை நிலவி வந்தது. நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்த வண்ணம் இருந்தது. தினமும் பல மாவட்டங்களில் 100+ பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

அதிலும் சென்னை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிக மோசமான வெப்பநிலை பதிவானது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் சென்னையில் இரவு முழுக்க பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னையின் வானிலை திடீர் என்று குளிச்சியாக மாறியுள்ளது.சென்னையின் முக்கிய பகுதிகளில் அதிகாலை வரை கனமழை பெய்தது;.
சென்னை தி நகர், வளசரவாக்கம், திருவான்மியூர், வடபழனி, அண்ணாசாலை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. கிண்டி, கே.கே.நகர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், வண்டலூர், பெருங்களத்தூர் பகுதிகளில் மழை இரவு முழுக்க வெளுத்தெடுத்தது. இதனால் சென்னையில் நிலவிய கடுமையான வெப்பம் தணிந்துள்ளது .
சென்னையில் இன்றும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடுமையான தென்மேற்கு பருவ காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இப்படி மழை பெய்யும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications