சென்னை மின்சார ரயில்கள் ரத்து.. ஆகஸ்ட் 18 வரை ரயில் சேவையில் மாற்றம்! எப்போது வழக்கம் போல இயங்கும்?
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் இப்போது ரயில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக ஆக. 14ம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில், மேலும் 4 நாட்களுக்கு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஆக. 18ம் தேதி மதியம் முதல் ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னையைப் பொறுத்தவரை இப்போது சென்னை சென்டிரல், எழும்பூருக்கு அடுத்து மூன்றாவது முக்கிய முனையமாகத் தாம்பரம் ரயில் நிலையம் இருக்கிறது.

இந்த தாம்பரம் ரயில் முனையத்தை மறுசீரமைக்கும் பணிகள் இப்போது நடந்து வருகிறது. இதன் காரணமாகத் தாம்பரம் ரயில் நிலையத்தில் பல ரயில் சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது.
மின்சார ரயில்கள்: கடந்த மாதம் முதலே சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கமாக இயக்கப்பட்டும் பல ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டது. தாம்பரம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் காரணமாக முதலில் ஆகஸ்ட் 14ம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே ரயில் சேவை மேலும் 4 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆக. 18ம் தேதி வரை மொத்தம் 55 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்து: விழுப்புரம் - தாம்பரம் (06028), விழுப்புரம் - மேல் மருவத்தூர் (06726), மேல் மருவத்தூர் - சென்னை கடற்கரை (06722), புதுச்சேரி - சென்னை எழும்பூர்(06026), சென்னை எழும்பூர் - புதுச்சேரி (06025), சென்னை கடற்கரை - மேல் மருவத்தூர் (06721), மேல் மருவத்தூர் - விழுப்புரம் (06725), தாம்பரம் - விழுப்புரம் (06027) ஆகிய ரயில்கள் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் 17 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரம் ரயில் நிலையம்: மேலும், சென்னை புறநகரில் இயக்கப்படும் ரயில்கள் பீச் முதல் பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல செங்கல்பட்டில் இருந்து வரும் ரயில்களும் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பயணிகளின் தேவை கருதிக் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் ரயில்கள் வழக்கம் போல இயங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி பகல் 12 மணி முதல் ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படியே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.. ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்ட நாள்களில் பயணிகளின் வசதிக்காகக் கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழகத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications