சென்னை புறநகர் மின்சார ரயில் பயணிகள் கவனம்! ரயில்வே கொடுத்த முக்கிய அறிவிப்பு!
சென்னை: சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. யுடிஎஸ் செயலி வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் இயங்காது. இதற்கு பதிலாக ரயில் ஒன் செயலியில் பயணிகள் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளையும் புறநகர் மின்சார ரயில்களுக்கான டிக்கெட்டுகளையும் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மின்சார ரயில் பயணிகள் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலில் பயணிக்கு விடிவெள்ளி போல இருப்பது மின்சார ரயில்கள்தான் என்று சொன்னால் மிகையல்ல.

மின்சார ரயில்கள் மற்றும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வரப்பிரசாதம் போல இருப்பது ரயில்வேயின் யுடிஎஸ் செயலிதான். பயணிகள் டிக்கெட் எடுக்க கவுண்டருக்கு காத்திருக்கும் நேரத்தில் ஒன்றிரண்டு ரயில்களே செல்லும் அளவுக்கு பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இதுபோன்ற நேரத்தில் வீட்டில் இருந்து கிளம்பும் போதே யுடிஎஸ் செயலியில் பயணிகள் டிக்கெட் புக்கிங் செய்து விட்டால் நேராக வந்து ரயிலில் ஏற முடியும். இதனால் ரயில் பயணிகளுக்கான தவிர்க்க முடியாத செயலியாக யுடிஎஸ் இருந்தது. இந்த நிலையில்தான் யுடிஎஸ் செயலி வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் இயங்காது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு பதிலாக ரயில் ஒன் செயலியில் பயணிகள் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளையும் புறநகர் மின்சார ரயில்களுக்கான டிக்கெட்டுகளையும் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கட்டுள்ளது. யுடிஎஸ் செயலியில் இருந்த டிகெட்டுகளையும் ரயில் ஒன் செயலிக்கு மாற்றிக்கொள்ளவும் முடியும் வசதிகளை தெற்கு ரயில்வே கொண்டு வந்துள்ளது.
ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளும் ரயில் ஒன் செயலியில் பெறலாம் என்ற அடிப்படையில் ரயில் ஒன் செயலி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications