சென்னையில் இன்று முதல் 42 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம்.. அரசு ஊழியர்கள் பயணிக்கலாம்
சென்னை: அத்தியாவசிய அரசு பணிகளுக்கு செல்ல இன்று முதல் 42 புறநகர் மின்சார ரயில்கள் சென்னையில் இயக்கப்படுகிறது.
Recommended Video
அத்தியாவசிய அரசு பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி கிடையாது, அடையாள அட்டை இல்லாமல் வந்தால் அரசு ஊழியராக இருந்தாலும் அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த அரசு 50 சதவீதம் பணியாளர்களுடன் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்கலாம் என்று அறிவித்தது. இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய அரசு பணிகளில் ஈடுபடுபவர்களின் வசதிக்காக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டது.
அதன்படி சென்ட்ரலில் இருந்து காலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை அரக்கோணத்திற்கும் அதைப்போன்று மறுமார்க்கமாக அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கும், அதைப்போன்று சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு- கடற்கரைக்கும் இரண்டு வழிதடங்களில் 30க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது..

இந்நிலையில் அண்மையில் ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதன்படி அனைத்து அலுவலகங்களும் 100 சதவீதம் பணியாளர்களுடன் இயக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சார ரயில்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதையடுத்து கூடுதல் மின்சார ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று முதல் கூடுதலாக 12 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்று காலை 5.30 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டுக்கு சென்றடையும். அதைப்போன்று செங்கல்பட்டில் இருந்து ஒரு ரயில் கடற்கரைக்கு வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில்களில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ரயில்வே பணியாளர்கள் மட்டும் பயணிக்கலாம். ஆனால் கட்டாயம் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அப்படி வந்தால் மட்டுமே டிக்கெட் வழங்கப்படும். அடையாள அட்டை இல்லாதவர்கள், பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் இன்று கூடுதலாக 12 ரயில்கள் இயக்கப்படுகிறது. இதையடுத்து அனைத்து வழித்தடங்களில் சேர்த்து இன்று 42க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு எப்போது புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்பது குறித்து அரசு இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications