சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பு! நடுவழியில் நின்ற ரயில்கள்! அரக்கோணம் ரூட்டில் தவித்த பயணிகள்
சென்னை: சென்னையில் அரக்கோணம் செல்லும் மார்க்கத்தில் திடீரென மின்சார தொடர்பில் ஏற்பட்ட பழது காரணமாக மின்சார ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நின்றன. இதனால் கடும் அவதிக்கு உள்ளான பயணிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.
ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ரயில்கள் அப்படியே நின்றதால் பொறுமை இழந்த பயணிகள் சிலர் தண்டவாளத்தில் இறங்கி அருகில் இருந்த பேருந்து நிலையங்களுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து பேருந்துகள் மற்றும் ரயில்களில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.

நடுவழியில் நின்ற ரயில்கள்
சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் மின்சார ரயில்கள் சேவை ஒன்றரை மணி நேரமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை செண்ட்ரலில் இருந்து அரக்கோணம் புறப்பட்ட மின்சார ரயில் இரவு 7.45 மணியளவில் திருமுல்லைவாயில் ரயில் நிலையம் அருகே வந்த போது மின்சார தொடர்பில் பழுது ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால், ரயில்கள் அதே இடத்தில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அரக்கோணம் மார்க்கத்தில் வந்த பிற ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
பயணிகள் கடும் அவதி
ஒன்றை மணி நேரத்திற்கும் மேலாகியும் கோளாறு சரி செய்யப்படாததால் அதிருப்தி அடைந்த பயணிகள் ரயில்வே ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரயில்கள் அப்படியே நின்றதால் பொறுமை இழந்த பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி அருகில் இருந்த பேருந்து நிலையங்களுக்கு சென்று பேருந்துகள் மற்றும் ரயில்களில் புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையே, கோளாறை சீர் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. கோளாறு சீர் செய்யப்பட்ட பிறகு ரயில்கள் புறப்பட்டு சென்றன. சென்னையின் முக்கிய வழித்த்தடங்களில் ஒன்றான அரக்கோணம் ரூட்டில் பீக் நேரத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது பயணிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது.
பயணிகள் கோரிக்கை
பெண்களும் முதியவர்களும் கடும் சிரமத்திற்குள்ளான நிலையில், இது போன்ற கோளாறுகள் ஏற்படாமல் தடுக்க ரயில்வே போதிய முன்னெச்சரிக்கையுடன் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பயணிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications