சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பு! நடுவழியில் நின்ற ரயில்கள்! அரக்கோணம் ரூட்டில் தவித்த பயணிகள்
சென்னை: சென்னையில் அரக்கோணம் செல்லும் மார்க்கத்தில் திடீரென மின்சார தொடர்பில் ஏற்பட்ட பழது காரணமாக மின்சார ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நின்றன. இதனால் கடும் அவதிக்கு உள்ளான பயணிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.
ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ரயில்கள் அப்படியே நின்றதால் பொறுமை இழந்த பயணிகள் சிலர் தண்டவாளத்தில் இறங்கி அருகில் இருந்த பேருந்து நிலையங்களுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து பேருந்துகள் மற்றும் ரயில்களில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.

நடுவழியில் நின்ற ரயில்கள்
சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் மின்சார ரயில்கள் சேவை ஒன்றரை மணி நேரமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை செண்ட்ரலில் இருந்து அரக்கோணம் புறப்பட்ட மின்சார ரயில் இரவு 7.45 மணியளவில் திருமுல்லைவாயில் ரயில் நிலையம் அருகே வந்த போது மின்சார தொடர்பில் பழுது ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால், ரயில்கள் அதே இடத்தில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அரக்கோணம் மார்க்கத்தில் வந்த பிற ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
பயணிகள் கடும் அவதி
ஒன்றை மணி நேரத்திற்கும் மேலாகியும் கோளாறு சரி செய்யப்படாததால் அதிருப்தி அடைந்த பயணிகள் ரயில்வே ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரயில்கள் அப்படியே நின்றதால் பொறுமை இழந்த பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி அருகில் இருந்த பேருந்து நிலையங்களுக்கு சென்று பேருந்துகள் மற்றும் ரயில்களில் புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையே, கோளாறை சீர் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. கோளாறு சீர் செய்யப்பட்ட பிறகு ரயில்கள் புறப்பட்டு சென்றன. சென்னையின் முக்கிய வழித்த்தடங்களில் ஒன்றான அரக்கோணம் ரூட்டில் பீக் நேரத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது பயணிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது.
பயணிகள் கோரிக்கை
பெண்களும் முதியவர்களும் கடும் சிரமத்திற்குள்ளான நிலையில், இது போன்ற கோளாறுகள் ஏற்படாமல் தடுக்க ரயில்வே போதிய முன்னெச்சரிக்கையுடன் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பயணிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications