சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்! ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதி
சென்னை: புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால், வழக்கத்தை விட குறைவான அளவில் மட்டுமே புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்படி இருக்கையில், ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்திருக்கிறது.
வழக்கமாக தினமும் 204 முறை எழும்பூர் வழியாக புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், இன்று தொடங்கி அடுத்த 45 நாட்களுக்கு, பராமரிப்பு பணிகள் காரணமாக 164 முறை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வழக்கமாக 10 மற்றும் 11வது நடைமேடைகளில் புறநகர் ரயில்கள் நின்று செல்லும். ஆனால், தற்போது பராமரிப்பு பணிகள் காரணமாக 5 மற்றும் 6வது நடைமேடைகளில் ரயில்கள் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வழக்கமாக பயணிக்கும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அதேபோல ரயிலகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதால் கல்லூரிக்கு செல்பவர்கள், பணிக்கு செல்பவர்கள், வெளியூரிலிருந்து வீடு திரும்புவோர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வழக்கமாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் ரயில்கள், இன்று முதல் 20-30 நிமிடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே, ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலை மோதியுள்ளது.
புறநகர் ரயில்களை பொறுத்தவரை 4 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படும்.
1. சென்ட்ரல்-அரக்கோணம்
2. சென்ட்ரல்-சூலூர்பேட்டை
3. கடற்கரை-செங்கல்பட்டு
4. கடற்கரை-வேளச்சேரி
இதில் சென்னை கடற்கரை தொடங்கி செங்கல்பட்டு வரை இயக்கப்படும் ரயில்களின் சேவைதான் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தாம்பரம், சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னைக்குள் வரும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நிலைமையை சரியை செய்ய பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்த பிரச்சனைக்கு நடுவில் இன்று அதிகாலை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது. எனவே ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறுக சிறுக 25 சவரன் சேர்த்த விசுவாசி… சென்னை தி.நகரில் பிரபல தங்க நகைக்கடை அலறியது ஏன்?” -
அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள் -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications