சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்! ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதி
சென்னை: புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால், வழக்கத்தை விட குறைவான அளவில் மட்டுமே புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்படி இருக்கையில், ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்திருக்கிறது.
வழக்கமாக தினமும் 204 முறை எழும்பூர் வழியாக புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், இன்று தொடங்கி அடுத்த 45 நாட்களுக்கு, பராமரிப்பு பணிகள் காரணமாக 164 முறை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வழக்கமாக 10 மற்றும் 11வது நடைமேடைகளில் புறநகர் ரயில்கள் நின்று செல்லும். ஆனால், தற்போது பராமரிப்பு பணிகள் காரணமாக 5 மற்றும் 6வது நடைமேடைகளில் ரயில்கள் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வழக்கமாக பயணிக்கும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அதேபோல ரயிலகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதால் கல்லூரிக்கு செல்பவர்கள், பணிக்கு செல்பவர்கள், வெளியூரிலிருந்து வீடு திரும்புவோர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வழக்கமாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் ரயில்கள், இன்று முதல் 20-30 நிமிடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே, ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலை மோதியுள்ளது.
புறநகர் ரயில்களை பொறுத்தவரை 4 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படும்.
1. சென்ட்ரல்-அரக்கோணம்
2. சென்ட்ரல்-சூலூர்பேட்டை
3. கடற்கரை-செங்கல்பட்டு
4. கடற்கரை-வேளச்சேரி
இதில் சென்னை கடற்கரை தொடங்கி செங்கல்பட்டு வரை இயக்கப்படும் ரயில்களின் சேவைதான் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தாம்பரம், சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னைக்குள் வரும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நிலைமையை சரியை செய்ய பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்த பிரச்சனைக்கு நடுவில் இன்று அதிகாலை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது. எனவே ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு!












Click it and Unblock the Notifications