Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாம்பரம் பெண் காவலருடன் உல்லாசம்.. ஒரே பொய்யில் காவலர், ஆட்டோ டிரைவர் என 2 பேரும்.. சிக்கியது எப்படி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தாம்பரம் ஆயுதப்படை பிரிவில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், போலீசாக பணியாற்றி வருகிறார். இவர், தாம்பரம் அடுத்த சேலையூர், பாரத் நகர் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பெண் காவலரை காதல் வலையில் ஏமாற்றி , திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்த போலீஸ்காரர் மற்றும் ஆட்டோ டிரைவர் கைதாகி உள்ளனர்.

திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றி அவர்களுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு கடைசியில் கைவிட்டுவிடுவது பல இடங்களில் நடக்கிறது. திருமண வாக்குறுதியை நம்பி காதலில் விழுந்து, கடைசியில் எல்லை மீறும் ஆண்களால் வாழ்க்கையில் பல பெண்கள் சிக்கலை சந்திக்கிறார்கள். இதில் பெண் காவலரும் விதிவிலக்கு அல்ல. பெண் காவலரை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த காவலர் மற்றும் ஆட்டோ டிரைவர் ஆகியோர் கைதாகி உள்ளனர்.

Chennai Tambaram cop and driver arrested for deceiving female cop by claiming to be married

மதுரை காவலர்

மதுரை மாவட்டத்தை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் சென்னை தாம்பரம் ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை-.. தாம்பரம் அடுத்த சேலையூர், பாரத் நகரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தபடி பணிக்கு சென்று வந்துள்ளார்.

பெண் போலீசுடன் உல்லாசம்

இந்நிலையில் ஆயுதப்படை பிரிவில் கபடி பயிற்சியாளராக பணியாற்றிய ஆவடி ஆயுதப்படை முதல் நிலை காவலரான சிட்லபாக்கம், ஏரிக்கரை தெருவைச் சேர்ந்த 35 வயதாகும் வீரமணி என்பவர் பெண் காவலருக்கு அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பேசி பழகி வந்தார்களாம். பின்னர் இருவருக்கும் இடையே காதலாக மாறியதாக கூறப்படுகிறது. வீரமணி, தனது வீட்டில் யாரும் இல்லாதபோது பெண் போலீசை வீட்டுக்கு அழைத்துச்சென்று அவருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

நண்பருடன் பழக்கம்

இதற்கிடையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பெண் போலீஸ் வற்புறுத்தினார். ஆனால் காலம் கடத்தி வந்த வீரமணி, தனது நண்பரான சிட்லபாக்கம், ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 30 வயதாகும் ஆட்டோ டிரைவர் சரத்குமார் என்பவரை பெண் போலீசுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

ஆட்டோ டிரைவரும் உல்லாசம்

அதன் பிறகு பெண் போலீஸ், சரத்குமாருடன் நெருங்கி பழகினார். அவர், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று பெண் போலீசுடன் ஆட்டோ டிரைவர் சரத்குமாரும் உல்லாசமாக இருந்தாராம். அதில் அவர் கர்ப்பமடைந்தார்.இந்நிலையில் தற்போது குழந்தை வேண்டாம் என கூறிய சரத்குமார், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பெண் போலீசுக்கு கருகலைப்பு செய்ததாக கூறப்படுகிறது.

இருவரும் ஏமாற்றியுள்ளனர்

இதனிடையே தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சரத்குமாரை பெண் போலீஸ் வற்புறுத்தினார். அப்போது தான் சரத்குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். காவலர் வீரமணி, அவரது நண்பரும் ஆட்டோ டிரைவருமான சரத்குமார் ஆகிய இருவரும் திட்டமிட்டு திருமண ஆசைவார்த்தைகள் கூறி தன்னிடம் உல்லாசமாக இருந்து ஏமாற்றியதை அறிந்த பெண் போலீஸ், இதுபற்றி தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.

காவலர், ஆட்டோ டிரைவர் கைது

இதையடுத்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சேலையூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டனர். அதன்படி சேலையூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் வீரமணி, அவரது நண்பரான ஆட்டோ டிரைவர் சரத்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+