என்னா அதிசயம்.. சென்னையில் முதல்முறையாக.. மிக மிக கம்மிதான்.. குட் கன்ட்ரோல்!
சென்னை: சென்னையில் டிபிஆர் சதவீதம் முதல்முறையாக 1 சதவீதத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை கொரோனா குறித்த தனியார் புள்ளி விவர ஆய்வாளர் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
பாசிட்டிவிட்டி ரேட் என்றால் என்ன என பார்த்தோமேயானால் 100 பேருக்கு கொரோனா சோதனை எடுத்தால் அதில் எத்தனை பேருக்கு பாசிட்டிவ் வருகிறது என்பதுதான் டிபிஆர் எனப்படும் Test Positivity Rate.
பொதுவாக 100 பேரில் 6 அல்லது 5 பேருக்கு கீழ் கொரோனா வைரஸ் பாதிப்பு வருகிறது என்றால் அந்த இடத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது என அர்த்தம். சென்னையில் கொரோனா தொற்று மிகவும் குறைந்து வருகிறது.

1 சதவீதம்
தற்போது முதல்முறையாக 1 சதவீதத்திற்கு குறைந்த அளவில பாசிட்டிவிட்டி ரேட் வந்துள்ளது. அதாவது 0.88 சதவீதம் ஆகும். இதுகுறித்து விஜய் ஆனந்த் தனது ட்வீட்டில் கூறுகையில் சென்னையில் முதல் முறையாக பாசிட்டிவிட்டி ரேட்டானது 0.88 சதவீதமாக உள்ளது.

சென்னை
கொரோனா ஒன்று மற்றும் இரண்டாவது அலையையும் சேர்த்து சென்னையில் நேற்றைய தினம் பாசிட்டிவிட்டி ரேட்டானது குறைந்துள்ளது. முதல் அலையின் போது கடந்த ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி டிபிஆர் ரேட்டானது அதிகபட்சமாக 20.5 சதவீதமாகும். அது போல் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி டிபிஆர் ரேட்டானது குறைந்தபட்சமாக 1.2 சதவீதமாக இருந்தது.

27.7 சதவீதம்
கடந்த ஆண்டு மே 11 ஆம் தேதி இரண்டாவது அலையின் போது அதிகபட்சமாக டிபிஆர் ரேட் 27.7 சதவீதம் இருந்தது. ஜூன் 30 ஆம் தேதி நேற்று மிகவும் குறைந்தபட்சமாக 0.88 சதவீதம் இருக்கிறது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 7 நாட்களில் சராசரியாக டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட்டானது 5 சதவீதத்திற்கு கீழ் இருந்தது.

விஜய் ஆனந்த்
சேலத்தில் மட்டும் பாசிட்டிவிட்டி ரேட்டானது 5.24 சதவீதமாக இருந்தது. ஆக்ஸிஜன் படுக்கை வசதி, கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை, பாசிட்டிவிட்டி ரேட் உள்ளிட்டவற்றையும் ஆய்வாளர் விஜய் ஆனந்த் வெளியிட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications