திடீரென அடித்த அலாரம்.. சென்னையிலிருந்து குவைத்துக்கு புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை : சென்னையிலிருந்து குவைத்துக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் திடீரென அலாரம் அடித்த காரணத்தால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலையில் 163 பயணிகளுடன் குவைத்துக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. ஆனால் அந்த விமானம் சிறிது நேரத்தில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.

விமானம் தரையிறங்கியவுடன் அதிகாரிகள் குழு நேரில் சென்ற விசாரித்தது. அப்போது விமானம் புறப்பட்டவுடன் திடீரென தவறுதலாக ஸ்மோக் அலாரம் அடித்துள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து இது முன்னெச்சரிக்கையாக விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்தது.












Click it and Unblock the Notifications