சென்னையில் ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து.. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு
சென்னை: சென்ட்ரல் அருகே சாணிகுளம் என்ற இடத்தில் ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. காலியாக சென்ற ரயில் எஞ்சினின் சக்கரம் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. ரயில் தடம்புரண்ட இடத்தில் நள்ளிரவு 1.15 மணி முதல் அதிகாலை 3 மணி வரை சீரமைப்பு பணிகள் நடைபெற்றன.
இன்றைய தினம் மற்றொரு இடத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ரயில் பெட்டிகள் தடம்புரள்வது அடிக்கடி நடந்து வருகிறது.

கடந்த வாரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு இன்று மதியம் 2.30 மணியளவில் பேசின்பிரிட்ஜ் ரயில் பணிமனைக்குச் சென்ற பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டது. இந்த விபத்தில் ரயில் பெட்டியின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின. இந்த ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications