Chennai Train: சென்னையில் இந்த 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனி எக்மோரில் இருந்து புறப்படாது.. பயணிகள் கவனம்!
சென்னை: சென்னை (Chennai Train) எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவதால், சில முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை, கொல்லம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 3 ரயில்கள் பிப்ரவரி முதல் - ஏப்ரல் மாதம் வரை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதில் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
எனவே பயணிகள் இதற்கு ஏற்றது போல் தங்கள் பயண திட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கே காணலாம்.

Chennai Train - சென்னை எழும்பூர் ரயில் நிலையம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு ரயில் நிலையங்களில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி எழும்பூர் ரயில் நிலையட்திலும் பல சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகள் காரணமாக சில ரயில் சேவைகள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக
தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்
* தஞ்சாவூர் - எழும்பூர் இடையிலான உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் - 16866),
* கேரளா மாநிலம் கொல்லம் - எழும்பூர் இடையிலான அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் (20636),
* ராமேசுவரம்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16752),
ஆகிய 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
இதேபோன்று மறுமார்க்கத்தில்,
* எழும்பூர் - தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் (16865),
* எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் (20635),
* எழும்பூர் - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரயில் (16751) ஆகியன பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
மேலும் சில ரயில்கள்
* எழும்பூர் - மும்பை சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் ரயில் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
* அகமதாபாத் - திருச்சி சிறப்பு ரயில் (வண்டி எண்- 09419) வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி இந்த ரயிலானது பிப். 5, 12, 19, 26, மாா்ச் 5, 12, 19, 26, மாா்ச் 2 ஆகிய தேதிகளில் அரக்கோணம் ஜங்ஷன், பெரம்பூா், சென்னை எழும்பூா், தாம்பரம், செங்கல்பட்டு ரயில் நிலையங்கள் வழியாக செல்லாமல், ரேனிகுண்டா, அரக்கோணம் வடக்கு, மேலப்பாக்கம், காட்பாடி, வேலூா் கண்டோன்மென்ட், விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.
* மறுமாா்க்கத்தில், திருச்சி - அகமதாபாத் சிறப்பு ரயிலல் (09420) வரும் பிப். 8, 15, 22, மாா்ச் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம் ஜங்ஷன் ரயில் நிலையங்கள் வழியாக செல்லாமல், மாறாக வேலூா் கண்டோன்மென்ட், காட்பாடி, மேலப்பாக்கம், திருத்தணி, ரேனிகுண்டா வழியாக இயக்கப்படும். என்று கூறப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இதற்கு ஏற்றது போல் தங்கள் பயண திட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications