Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chennai Train: சென்னையில் இந்த 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனி எக்மோரில் இருந்து புறப்படாது.. பயணிகள் கவனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை (Chennai Train) எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவதால், சில முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை, கொல்லம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 3 ரயில்கள் பிப்ரவரி முதல் - ஏப்ரல் மாதம் வரை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதில் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

எனவே பயணிகள் இதற்கு ஏற்றது போல் தங்கள் பயண திட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கே காணலாம்.

Chennai Train

Chennai Train - சென்னை எழும்பூர் ரயில் நிலையம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு ரயில் நிலையங்களில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி எழும்பூர் ரயில் நிலையட்திலும் பல சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணிகள் காரணமாக சில ரயில் சேவைகள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக

தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்

* தஞ்சாவூர் - எழும்பூர் இடையிலான உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் - 16866),
* கேரளா மாநிலம் கொல்லம் - எழும்பூர் இடையிலான அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் (20636),
* ராமேசுவரம்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16752),
ஆகிய 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

இதேபோன்று மறுமார்க்கத்தில்,
* எழும்பூர் - தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் (16865),
* எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் (20635),
* எழும்பூர் - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரயில் (16751) ஆகியன பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

மேலும் சில ரயில்கள்

* எழும்பூர் - மும்பை சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் ரயில் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

* அகமதாபாத் - திருச்சி சிறப்பு ரயில் (வண்டி எண்- 09419) வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி இந்த ரயிலானது பிப். 5, 12, 19, 26, மாா்ச் 5, 12, 19, 26, மாா்ச் 2 ஆகிய தேதிகளில் அரக்கோணம் ஜங்ஷன், பெரம்பூா், சென்னை எழும்பூா், தாம்பரம், செங்கல்பட்டு ரயில் நிலையங்கள் வழியாக செல்லாமல், ரேனிகுண்டா, அரக்கோணம் வடக்கு, மேலப்பாக்கம், காட்பாடி, வேலூா் கண்டோன்மென்ட், விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.

* மறுமாா்க்கத்தில், திருச்சி - அகமதாபாத் சிறப்பு ரயிலல் (09420) வரும் பிப். 8, 15, 22, மாா்ச் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம் ஜங்ஷன் ரயில் நிலையங்கள் வழியாக செல்லாமல், மாறாக வேலூா் கண்டோன்மென்ட், காட்பாடி, மேலப்பாக்கம், திருத்தணி, ரேனிகுண்டா வழியாக இயக்கப்படும். என்று கூறப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இதற்கு ஏற்றது போல் தங்கள் பயண திட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+