ருத்ராட்சைக்கு ஆசைப்பட்டு.. பூசாரியின் உல்லாசத்தில் பெண் விழுந்து.. சென்னையில் கணவரின் ரகசிய தரிசனம்
சென்னை: சென்னையில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த பேரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் என்றாலும், பழகிய நபர்களும், கட்டிய கணவனுமே முதுகில் குத்திய சம்பவம் நிலைகுலைய வைத்துள்ளது.. தேவி என்ற பெண் இது தொடர்பாக போலீசுக்கு சென்றுள்ளார்.. அவர் தந்த புகாரின் பேரில் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.. என்ன நடந்தது சென்னை வடபழனியில்?
தீய சக்திகளை அழிக்கும் ருத்ராட்ச மாலை தருவதாக இளம்பெண்ணை வடபழனிக்கு அழைத்து சென்று கோயில் பூசாரி உல்லாசமாக இருந்துள்ளார். இருவரும் நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து தனது மனைவியிடமே ரூ.10 லட்சம் கேட்டு கணவன் மிரட்டிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேவி பக்தி
சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் தேவி.. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். தேவியின் வீட்டுப்பக்கத்திலேயே ஆதிபூரீஸ்வரர் கோயில் உள்ளது.. எனவே, இந்த கோயிலுக்கு தேவி அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
அப்படி செல்லும்போதுதான், தேவிக்கு கோயில் பூசாரி அசோக் பாரதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இந்த பூசாரிக்கு 40 வயதாகிறது... ஒருநாள் பூசாரியிடம் தேவி, "உங்களுடன் நான் பழகுவதால், என்னுடைய குடும்பத்தில் அடிக்கடி தகராறு வருகிறது. கணவரும் என்னிடம் நெருக்கமாக இருப்பதில்லை" என்று சொன்னாராம்.
தீய சக்திகள்
இதைக்கேட்ட அசோக் பாரதி, வீட்டில் தீய சக்திகள் இருக்கிறது. அதை விரட்டினால்தான், உன்னிடம் கணவர் நெருக்கமாக இருப்பார் என்றாராம்.. உடனே தேவி, அப்படியானால், இதற்கு பரிகாரம் உள்ளதா? என்று கேட்க, ஏன் இல்லை? கோயில் பூசாரி, தீய சக்திகளை அழிக்கும் ருத்ராட்ச மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டால், எந்த தீய சக்திகள் உன்னிடம் நெருங்காது என்றாராம் பூசாரி.
உடனே தேவி, அந்த ருத்ராட்ச மாலை எனக்கு உடனே வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு கோயில் பூசாரி, "வடபழனி முருகன் கோயிலில், ருத்ராட்ச மாலையை உனக்கு தருகிறேன்.. அதை அணிந்து கொண்டால், தீய சக்தி நெருங்காது" என்று சொல்லி கடந்த 6ம் தேதி தேவியை வடபழனி முருகன் கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளார்.. கோயிலுக்கு வெளியே ருத்ராட்ச மாலையை வாங்கியிருக்கிறார்..
கழுத்தில் ருத்ராட்சை
ருத்ராட்சையை முருகன் முன்பு படைக்க சென்றபோது, அதற்குள் கோயில் நடை சாத்தப்பட்டுவிட்டது.. கோயில் திறக்கும்வரை, தன்னுடைய உறவினர் வீட்டில் வந்து தங்கியிருக்கலாம் எஎனறு சொல்லி தேவியை அழைத்து சென்றுள்ளார்..
தேவியை தவறாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காகவே, வடபழனி பக்தவச்சலம் காலனியில், உறவினர்கள் வீட்டில் யாருமில்லாத நேரம் பார்த்து அழைத்து சென்றுள்ளார் பூசாரி.. அப்போது தேவியிடம் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் பேசி, உல்லாசமாகவும் இருந்துள்ளார் பூசாரி.
இதனிடையே, ஏற்கனவே தேவி மீது கணவருக்கு சந்தேகம் இருந்ததால், வடபழனி கோயிலுக்கு சென்ற தினத்தன்றும் சந்தேகம் வலுத்துள்ளது.. அதனால், தேவியின் கணவர், இவர்களை பின்தொடர்ந்தபடியே வந்துள்ளார்.. வடபழனியில் உறவினர் வீட்டுக்கு தேவியை அழைத்து செல்வதையும் கவனித்துள்ளார். பிறகுதான், அந்த உறவினர் வீட்டுக்கே சென்று, இவர்களை கையும் களவுமாக பிடித்துவிட்டார்.
கணவர் தந்த அதிர்ச்சி
ஆனால் அங்கேதான் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.. கோயில் பூசாரியுடன் மறுபடியும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கணவரே தேவியை வற்புறுத்தியிருக்கிறார்.. அதை தன்னுடைய செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டார்.
பிறகு மனைவி தேவியிடமும், பூசாரியிடமும், உங்கள் இருவரின் ஆபாச வீடியோ என்னிடம் உள்ளது. இதை உங்கள் வீடுகளில் உறவினர்களிடம் காட்ட போகிறேன்.. அப்படி வீடியோவை காட்ட கூடாதென்றால், எனக்கு ரூ.10 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார்..
போலீசுக்கு போன மனைவி
இதை பூசாரியும் எதிர்பாரக்கவில்லை.. தேவியும் எதிர்பார்க்கவில்லை..ருத்ராட்சை தருவதாக சொல்லி பூசாரியிடம் ஏமாந்ததுடன், வீடியோவை காட்டி ஏமாற்றும் கணவரிடமும் பலிகடா ஆகிவிட்டதையறிந்து நிலைகுலைந்து போனார். இதற்குபிறகுதான், அசோக் பாரதி மீதும், கோயில் பூசாரியுடன் உல்லாசமாக இருக்க வைத்து அதை செல்போனில் வீடியோ எடுத்து ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டும் கணவர் மீதும் சென்னை கமிஷனர் ஆபீசிலேயே புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் வடபழனி மகளிர் போலீசார், இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டனர்.. ஆரம்பத்திலிருந்தே தேவி மீது பூசாரிக்கு தவறான பார்வை இருந்து வந்துள்ளது.. எப்படியாவது அவரை தன்னுடைய ஆசைக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், ருத்ராட்சை மாலை தருவதாக பொய் சொன்னதும் அம்பலமானது.
இந்த பூசாரி, பள்ளிக்கரணை ஜல்லடியன்பேட்டை சுப்பிரமணி 2வது தெருவை சேர்ந்த கோயில் பூசாரியாம்.. பூசாரியுடன் சேர்த்து தேவியை மிரட்டி 10 லட்சம் பணம் கேட்ட கணவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications