சென்னை மக்களே.. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? இன்னைக்கு செம வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: தமிழ்நாட்டில் சமீபத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கை (SIR) மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனையடுத்து வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், பல லட்சம் வாக்காளர்கள் விடுபட்டிருந்தனர். குறிப்பாக, சென்னையில் 3ல் 1 வாக்காளர் பெயர் விடுபட்டிருந்தது. எனவே விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இன்று சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட, 19 பேரவை தொகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதனை பயன்படுத்தி, விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.

முகாம் குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 19 பேரவைத் தொகுதிகளிலும் கடந்த 2025 நவம்பர் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து கடந்த டிசம்பர் 19- ஆம் தேதி வரைவு வாக்காளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி புதிய வாக்காளா்களாக தங்களைச் சோ்த்துக் கொள்ளுவதற்கான விண்ணப்பப் படிவம் வழங்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. சென்னை பகுதிகளில் மொத்தம் 4,079 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவை அனைத்திலும் சிறப்பு முகாம்கள் சனி, ஞாயிறு (ஜன. 10, 11) ஆகிய நாள்களில் காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளன.
ஏற்கெனவே 4 சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளன. சிறப்பு முகாம்களில் வாக்காளா் சோ்க்கைக்கு படிவம் 6, ஆட்சேபணை தெரிவித்தல் மற்றும் நீக்குதலுக்கு படிவம் 7, வாக்காளா் முகவரி மாற்றம் ஏற்கெனவே உள்ள வாக்காளா் பட்டியலில் இடம் பெற்ற பெயா்கள், முகவரி, புகைப்படம் உள்ளிட்டவற்றில் மாற்றம் தேவைப்படின் படிவம் 8 ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
இந்த முகாம்களைப் பயன்படுத்தி 18 வயது பூர்த்தியடைந்தவா்கள், வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ள முன்வரவேண்டும்" என கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
-
சென்னை சாலைகளில்.. களமிறக்கப்படும் 'இன்ஃப்ராரெட்' அஸ்திரம்.. வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு.. முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு! கோடை விடுமுறை தேதி அறிவிப்பு -
அசத்தி காட்டிய தமிழ்நாடு.. ஐடியா கேட்டு வந்த உத்தரப் பிரதேசம்! வழிகாட்ட நம்ம ரெடி! -
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
வணிக காஸ் சிலிண்டர் ரூ.5000, 6000 என விற்பனை.. சென்னை,கோவையில் மூடப்படும் ஏராளமான உணவங்கள் -
சென்னை மாதவரத்தில் 46 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க












Click it and Unblock the Notifications