தமிழகம்.. மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா அறிகுறியுடன் வருவோருக்கு தனி பாதை
சென்னை: அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா அறிகுறி உள்ளோருக்கு தனிப் பாதையை ஏற்படுத்த, தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சென்னை நகரில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம். அதிலும் வார்டு வாரியாக எடுத்து பார்த்தால், சில மண்டலங்கள், பல மாவட்டங்களின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கின்றன.
அதிலும் முதலிடத்தில் இருப்பது ராயபுரம் மண்டலம். அங்கு 1981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடம்பாக்கம் மண்டலத்தில், 1460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறைந்த இடம்
திருவிகநகர் மண்டலத்தில் 1188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார் பேட்டை 1044, அண்ணாநகர் 867 என்ற வகையில் உள்ளது. சென்னையில் இருப்பதிலேயே, குறைவாக நோயாளிகள் உள்ள மண்டலம் ஆலந்தூர். அங்கு 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய விதிமுறை
இதனிடையே, கொரானா பாதிப்புடன் வருபவர்களுக்கு, அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் தனி பாதையை ஏற்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சுற்றறிக்கை
தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை அமைச்சக பரிந்துரையை குறிப்பிட்டு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா நோயாளிகளுக்காக புதிய நடைமுறையை பின்பற்ற அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கிருமிநாசினி
மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் அமரும் அறை, காத்திருப்போர் அமரும் இருக்கைகள், கிருமிநாசினி உள்ளிட்டவற்றை கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்கள் உள்ளே நுழையவும், வெளியேறவும் தனி பாதையை ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications