Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆதி திராவிட கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு! சட்டசபையில் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அதற்கான சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 2000 ஆண்டுகளாக சமூக மற்றும் பொருளாதார ரீதியதாக ஒடுக்கப்பட்ட சமூகமாக இருந்த மக்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இந்த ஒடுக்கு முறை அடுக்கின் முன்னணியில் இருக்கும் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்பட்டது. இவ்வாறு இருக்கையில் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதத்திற்கு சென்ற ஆதி திராவிடர் மக்களுக்கு இடஒதுக்கீடு என்பது வழங்கப்படவில்லை. அதாவது இந்த மதங்களில் ஆதி திராவிடர் என்கிற வேறுபாடு கிடையாது என மத்திய அரசு கூறிவருகிறது.

Chief Minister M. K. Stalin brings a separate resolution to give reservation to Adi Dravidians who have converted to Christianity

இந்த பிரச்னை நாடு முழுவதும் பல்வேறு மதங்களில் இருந்தது. உதாரணமாக சீக்கிய மதங்களில் இந்த பிரச்னை இருந்தபோது அம்மக்கள் போராட்டங்களை நடத்தினர். இதனையடுத்து சீக்கியர்களாக மாறிய ஆதி திராவிடர் மக்களுக்கு இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. அதேபோல பௌத்த மதத்திலும் உள்ள ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. ஆனால் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதத்திற்கு சென்ற ஆதி திராவிடர் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

எனவே இந்த மதத்தில் உள்ள ஆதி திராவிடர் மக்கள் பட்டியல் சமூகத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று கடந்த 2004ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அதற்கான சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது தீர்மானத்தை வாசித்த அவர் "இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு இந்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது" என்று கூறி இதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி 3 முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது தீர்மானத்தை வாசித்த அவர் "இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு இந்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது" என்று கூறி இதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த தீர்மானம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி 3 முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+