திராவிட மாடலுக்கு முன்னத்தி ஏர் சர்.பிட்டி.தியாகராயர்! வெள்ளுடை வேந்தரை நினைவுகூர்ந்த ஸ்டாலின்!
சென்னை: திராவிட மாடலுக்கு முன்னத்தி ஏர் சர்.பிட்டி.தியாகராயர் என முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சர். பிட்டி. தியாகராயர் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு;

"திராவிட வீரனே விழி, எழு, நட!" எனத் திராவிட இனத்தைத் தட்டியெழுப்பிய நீதிக்கட்சியின் தந்தை தியாகராயரின் பிறந்தநாள்!
மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி, இன்று காலைச் சிற்றுண்டி வழங்கும் நமது திராவிட மாடலுக்கு முன்னத்தி ஏராகத் திகழ்ந்தவர் அவர்!
அவர் காட்டிய பாதையில் தொடர்ந்து கொள்கை நடைபோடுவோம்! தமிழ்நாட்டின் நலன் காக்க உழைப்போம்! இவ்வாறு ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
மேலும், சர்.பிட்டி.தியாகராயர் பற்றி அண்ணா கூறியதையும் மேற்கோள்காட்டி பதிவு வெளியிட்டிருந்தார். அதன் விவரம் வருமாறு;

''தியாகராயர்தான் நாம் வெற்றி மேல் வெற்றி பெற வழிகாட்டினார். இருட்டு அறைகளிலும் காட்டு நிலத்திலும் கூட்டம் கூடி இயேசுநாதர் உபதேசத்தைக் கேட்டு உலகம் உயர்ந்ததுபோல, தியாகராயரின் சொற்கள் தென்னாட்டில் மெள்ள மெள்ள ஏழை எளியோர் குடிசையில் குடி புகுந்து பின்னர் மாளிகைகளிலெல்லாம் சென்று மக்கள் மன்றத்திலே புதியதோர் எழுச்சியை உண்டாக்கிவிட்டது.
தியாகராயர் புதுமை பல செய்து காட்டினார். அதிலே தலைசிறந்த புதுமைதான் இந்தப் பார்ப்பனரல்லாதார் புரட்சி. அது மிக அபூர்வமான வெற்றியைத் திராவிடருக்குத் தந்தது."












Click it and Unblock the Notifications