"தென்னகத்து போஸ்" ஜெயந்தி விழாவில் முத்துராமலிங்கத் தேவரை நினைவு கூர்ந்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : "தென்னகத்து போஸ்" ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழாவும் 60-வது குருபூஜை விழாவும் நடைபெற்று வருகிறது. வழக்கம் போலவே இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அக்டோபர் 28ஆம் தேதி ஆன்மீக விழாவாகவும் அக்டோபர் 29ஆம் தேதி அரசியல் விழாவாகவும் இன்று அக்டோபர் 30ஆம் தேதி அரசு விழாவாகவும் நடைபெற்று வருகிறது.

தேவர் ஜெயந்தி
இதனின் தொடர்ச்சியாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினரும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர். மேலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காலை 9 மணி முதலே நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் மாலையணிவித்து அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்

தமிழக அரசு சார்பில் மரியாதை
இந்நிலையில் இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, மூர்த்தி,ஐ. பெரியசாமி மற்றும் அன்பில் மகேஷ் உள்ளிட்ட 8 அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் பலரும் திரளாக பங்கேற்றனர்.

முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில் "தென்னகத்து போஸ்" என முத்துராமலிங்க தேவருக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,""கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்! ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்! "தென்னகத்து போஸ்" ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்!" என பதிவிட்டுள்ளார்.

"தென்னகத்து போஸ்"
முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார் என அறிவிக்கப்பட்டது. எதிர்கட்சி தலைவராக இருந்த போதே மு.க.ஸ்டாலின் பலமுறை தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திடீர் உடல் நலக் குறைவால் முதல்வரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications