"தென்னகத்து போஸ்" ஜெயந்தி விழாவில் முத்துராமலிங்கத் தேவரை நினைவு கூர்ந்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : "தென்னகத்து போஸ்" ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழாவும் 60-வது குருபூஜை விழாவும் நடைபெற்று வருகிறது. வழக்கம் போலவே இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அக்டோபர் 28ஆம் தேதி ஆன்மீக விழாவாகவும் அக்டோபர் 29ஆம் தேதி அரசியல் விழாவாகவும் இன்று அக்டோபர் 30ஆம் தேதி அரசு விழாவாகவும் நடைபெற்று வருகிறது.

தேவர் ஜெயந்தி
இதனின் தொடர்ச்சியாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினரும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர். மேலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காலை 9 மணி முதலே நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் மாலையணிவித்து அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்

தமிழக அரசு சார்பில் மரியாதை
இந்நிலையில் இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, மூர்த்தி,ஐ. பெரியசாமி மற்றும் அன்பில் மகேஷ் உள்ளிட்ட 8 அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் பலரும் திரளாக பங்கேற்றனர்.

முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில் "தென்னகத்து போஸ்" என முத்துராமலிங்க தேவருக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,""கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்! ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்! "தென்னகத்து போஸ்" ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்!" என பதிவிட்டுள்ளார்.

"தென்னகத்து போஸ்"
முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார் என அறிவிக்கப்பட்டது. எதிர்கட்சி தலைவராக இருந்த போதே மு.க.ஸ்டாலின் பலமுறை தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திடீர் உடல் நலக் குறைவால் முதல்வரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications